🌻 அழகி 79

201 12 1
                                    

"ம்மா.... இப்ப நா நேரா வீட்டுக்கே போவட்டா?" என்று காரின் முன்புற இருக்கையிலிருந்து திரும்பி முகிலிடம் கேட்ட நஸாரிடம்,

"ஆமாய்யா..... நாளைக்கு காலையில ஜெயனு கோயிலுக்குப் போயிக்கிடுவான்... நீ இப்ப வீட்டுக்கே போயிடுய்யா!" என்று சொன்னார் முகில்.

அறையில் இருந்து வெளியேறிய மகனின் கோலத்தைப் பார்த்ததும் அவனை ரெண்டு திட்டு திட்டி விட்டு
தான் போட்ட திட்டத்தை தானே மாற்றியமைத்து விட்டார்.

"எங்கயாவது ஊரு சுத்த கெளம்பிடாத! நேரா வீட்டுக்கு வரணும். புரியுதா?" என்று சொன்னவர் வதனியை அவனுடன் பைக்கில் ஏறச் சொல்லி விட்டு நஸாருடன் காரில் வீட்டுக்குப் புறப்பட்டு சென்றார்.

"ஓய் ஹெட்லைட்டு..... இப்ப ஒருக்க ஒங்க புருஷன இறுக்கி அணைங்க பாப்போம்!" என்று சொன்னவனிடம் சந்தேகக் குரலில்,

"முகில்ம்மா கோபமா இருக்காங்களா ஜெயன்? என்னைய உங்கூட வரச் சொல்லிட்டு கெளம்பிட்டாங்க?" என்று கேட்டாள்.

"அது...... ஒரு சின்ன பெசகு! நா ஒனக்கு வீட்ல போயி அந்த கதைய சொல்றேன்!" என்று சொன்னவனின் இடையை இரு கைகளாலும் அணைத்துப் பிடித்துக் கொண்டவள் பின்னிருந்து அவனிடம்,

"இது போதுமா வீட்டுக்கார்?" என்று புன்னகைத்த படி கேட்டாள்.

"மேடம்.... நானெல்லா வெளிய சுத்துற கார்! நீங்கதா என் வீட்டுக்கார்! வீட்டுக்குப் போற வரையில ஸீட்ல என்னைய விட்டு
பின்னால தள்ளிப் போயி ஒக்காரக் கூடாது..... பாதியிலயே எஇடுப்புல இருந்து கைய எடுத்துடக் கூடாது!
பொடவ உடுத்தியிருக்க வேற! ஜாக்ரதயா ஒக்காரு!" என்று அவளுக்குப் பத்திரம் சொன்னவன் அவளுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

இருவரும் வீட்டிற்கு வெளியே வந்து பைக்கை நிறுத்திய போது முகிலமுதத்தின் தோழி சாந்தலெஷ்மி ஆரத்தி தட்டுடன் நிற்க நஸார் வீட்டைத் திறந்து விட்டு டிக்கியில் இருந்த நிறைய பரிசுப்பொருட்கள், மண்டபத்திற்கு எடுத்து சென்ற சில பைகள் எல்லாவற்றையும் வீட்டுக்குள் கொண்டு போய் வைத்து விட்டு மணமக்கள் திருமண வேளையில் அணிந்திருந்த மணமாலைகளை காரில் இருந்து எடுத்து வந்து நண்பன் கையில் கொடுத்தான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now