🌻 அழகி 89

200 9 1
                                    

அதிகாலை ஐந்தரை மணிக்கு ஜெயனுடைய வீட்டு வாசலில் நின்று கொண்டு இப்போது கதவை தட்டுவோமா வேண்டாமா என்று எட்டு யோசனை யோசித்துக் கொண்டிருந்தவனை மாடியில் இருந்து பார்த்து விட்டு படிகளில் ஓடி வந்தாள் வதனி.

"ஜெயன் எங்க நஸார் ஸார்?" என்று மூச்சிரைக்க கேட்டவளிடம்,

"அதா சொன்னேனேம்மா? சவாரிக்குப் போயிருக்கான். ராத்திரி பூரா தூங்கவேயில்லயா நீயி? இப்ப எதுக்கு என்னையப் பாத்துட்டு திடுதிடுன்னு ஒடியாந்த?" என்று சற்றே அழுத்தமான குரலில் கேட்டான்.

"நீங்க சொன்ன மாதிரி ஜெயன் சவாரிக்கு போயிருந்தா முகில்ம்மாட்ட, எங்கிட்ட.... ஏன் அந்தோ கட்டி வச்சு நிக்குதுங்க பாருங்க.... ரெண்டு ஜீவனுங்க; அதுங்க கிட்ட முதற்கொண்டு சொல்லிட்டு தான் வீட்ட விட்டு கெளம்புவான். ஒரு போன் கூட பேச முடியாம அர்ஜெண்ட்டா  வண்டியெடுத்துட்டு கெளம்பவே மாட்டான்!"

"அப்டியே நீங்க சொல்ற மாதிரி அவன் சவாரிக்கு தான் போயிருக்கான்னா நீங்க எதுக்கு  இந்த நேரத்துல வீட்டுக்கு வந்துருக்கீங்க....? அதுவும் வீட்டுக்குள்ள வராம வெளியவே நின்னு கையப் பெசஞ்சுக்கிட்டு நிக்குறீங்க? என்ன ஆச்சுன்னு தயவுசெஞ்சு சொல்லுங்க நஸார் ஸார்!"

"ஜெயன் இன்னும் கெடைக்கலையா? அவனுக்கு ஒண்ணும் ஆகிடல தான? இஸ் ஹி ஆல்ரைட்? எங்க இருக்கான் இப்போ?" என்று கண்களில் பொங்கி வழிந்த வந்த கண்ணீருடன் நஸாரிடம் கேட்டாள்.

"ஐயோ.... நீ மொதல்ல பயப்படாம இப்டி கண்ணீரு உடாம தைரியமா இரும்மா! ஜெயனுக்கு ஒண்ணுமில்ல!" என்று மென்று விழுங்கியவனிடம்,

"அவனுக்கு ஒண்ணுமில்லன்னா இந்நேரம் அவன் வீட்ல தான ஸார் இருந்துருக்கணும்? ஒரு ஃபுல் நைட் வீட்டுக்கு வராம, எங்க இருக்கேன்னு இன்ஃபர்மேஷனும் குடுக்காம எங்க போனான்? இப்ப கூட அவன் நல்லா தான் இருக்கான்னு சொல்ல மாட்டேங்குறீங்களே நீங்க? ஜெயன் எங்க தான் ஸார் இருக்கான்.... தயவு செஞ்சு சொல்லுங்களேன்!" என்று கைகூப்பி கேட்ட கேள்வியையே மறுமுறை கேட்டவளிடம் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு,

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now