🌻 அழகி 47

199 15 0
                                    

ஞாயிறன்று அதிகாலையிலேயே குன்னூரில் இருந்து கிளம்பி கோயமுத்தூரில் ஈச்சநாரி விநாயகர் கோயிலுக்கு வதனியையும், முகிலமுதத்தையும் அழைத்து வந்திருந்தான் ஜெயன்.

"ம்ப்ச்! கோவிலுக்கு எல்லாம் எதுக்காக கூட்டிட்டு வர்ற? எனக்கு இங்க வரப் பிடிக்கவேயில்ல!" என்று முணங்கியவளிடம்,

"ஆ.....ங்; சாமியே கும்பிட மாட்டேன்னு சொல்லிட்டு, உன் கற்பகாம்பாள மட்டும் இன்னமும் டெய்லி அமுக்கி அமுக்கிக் கும்பிடுற.... அதென்ன மத்த சாமி மேலயெல்லாம் அர்த்தமில்லாத கோபம்? சாமி கும்பிட வரலையின்னா பரவாயில்ல..... சும்மா கோவில்ல வந்து அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பாரு.... உள்ள வா!" என்று சொல்லி வதனியையும் தன்னுடன் பிடித்து இழுத்துச் சென்றான் ஜெயன்.

"அமுதாம்மா..... நல்லா சாமி பாத்தியா? இல்ல இன்னொரு தடவ போயி வரிசையில நிப்பமா?" என்று கேட்டவனிடம்,

"போதுமுடா ஜெயனு..... சாமிய நல்லாப் பார்த்து மனசார வேண்டிக்கிட்டேன். எம்புள்ள எப்டி என்னைய பத்திரமா பாத்து பாத்து கூட்டிக்கிட்டு வர்றானோ, அதமாதிரி எம்பேரன் கூடயும் இப்டி கோயில், குளம், பார்க்கு, சினிமான்னு ரவுண்டு அடிக்குற வர தெம்பா இருக்கணும்டா சாமின்னு வேண்டிக்கிட்டேன்! நீ என்ன வேண்டிக்கிட்ட?" என்று மகனிடம் கேட்டார்.

"என்னத்த பெரிசா வேண்டிக்கிட? எல்லாரும் மனசுல கவல இல்லாம, நிம்மதியா நல்லாயிருக்கணும். அவ்வளவு தான் எங்க போனாலும் நம்ம வேண்டுதல்..... ஒன்னைய மாதிரி பேரன் கூட ஊரு சுத்துற வரைக்கும் எல்லாம் நம்பளால யோசிக்க முடியாது..... ஆனாலும் என்னா நேக்கா வேண்டுதல போட்டுருக்க அமுதாம்மா நீயி?"

"பேரன் வரணுமுன்னா மொதல்ல புள்ளைக்கு கல்யாணம் நடக்கணும்; இப்டி பாத்து பாத்து கூட்டிட்டு வரணுமின்னா பேரனுக்கு கொறஞ்சது இருபது வயசாவது ஆகணும்.... அது வரைக்கும் நீயி நல்லா தெம்பா வேற இருக்கணுமுன்னு வேண்டிக்கிடுற; எப்பா சாமி; பொம்பளங்க உங்க கிட்ட இருக்குற நேக்க அடிச்சுக்கவே முடியாது அமுதாம்மா!" என்று தன்னுடைய அன்னையை கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தவனின் அருகில் அமைதியாக அமர்ந்து அவர்களுடைய உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தாள் வதனி.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now