🌻 அழகி 45

219 15 4
                                    

எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்ததென்றும் தெரியவில்லை..... அவளை இழுத்து அணைக்கையில் அடித்துப் புரண்டு கொண்டு வந்த தைரியம் இப்போது எங்கு போனதென்றும் தெரியவில்லை.

கலங்கிய விழிகளும், வீங்கிய உதடுமாக பர்வதவர்த்தினி அவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த போது அவன் எலும்பெல்லாம் தூள் தூளாக உடைந்து விடும் அளவிற்கு அவளுடைய பார்வை தீவிரமாக இருந்தது.

"இப்டி பாக்காத வர்த்தினி; நான் செஞ்சது தப்பில்ல..... நானும் எத்தன மாசமா நீ எனக்குத்தான்னு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டு ஒங்கிட்ட இருந்து வெலகி நிக்குறது? ரிஸார்ட்டுல நாம ரெண்டு பேருமா சேந்து கைய கோத்துக்கிட்டு வெளையாண்டதுல புத்தி கொஞ்சம் தடுமாறிடுச்சுன்னு வையேன்.....!"

"இதுக்கு நான் உங்கிட்ட மன்னிப்பெல்லாம் கேக்க மாட்டேன்; நீயும் என்னைய திருப்பி ஏதாவது பண்றதுன்னா பண்ணிக்க! பூண்டு தட்டுற கல்லெடுத்து என் பல்ல வேணும்னாலும் ஒடச்சி விடு..... எனக்கு ஒரு பிரச்சனையுமில்ல!"
என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் பேச்சைக் காது கொண்டு கேட்பது தான் வதனிக்கு இப்போது கடினமான காரியமாக இருந்தது.

அவன் பேசும் வரையில் அவனை முறைத்துக் கொண்டு நின்றவள், "நான் செஞ்சது தப்பில்ல....!" என்ற அவனது பேச்சால் குழம்பியிருந்தாள்.

என் அனுமதியில்லாமல் அவன் எனக்கு கொடுத்த முத்தம் தவறு தானே என்று இவ்வளவு நேரமாக அவளது கோபம் அடங்காத மனம் அவளிடம் கேட்டிருக்க,

"நானும் உங்கிட்ட இருந்து எவ்வளவு நாளைக்கு இப்டி வெலகி நிக்குறது?" என்று கேட்டு தன் பேச்சால் அவளை தெளிவாக குழப்பியிருந்தான் ஜெயன்.

என்ன பேசுவதென்று தெரியாமல், அங்கு நிற்கவும் முடியாமல்
சில நிமிடங்களுக்குப் பிறகு அவனது முகத்தைப் பாராமல் மேலே அவளுடைய அறைக்கு ஓடி விடுவோம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தவளை கைப்பற்றி நிறுத்தியவன்,

"எங்க ஓடுற? நா சாப்ட்டு முடிக்குற வரைக்கும் கூட இரு!" என்று ஒன்றுமே நடக்காதது போல் கூறினான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now