🌻 அழகி 12

283 14 1
                                    

"யேய் ஜெயனு.... எந்திரிடா! இன்னிக்கு காலையில ஒரு வேலைக்கும் கெளம்பிப் போகலயாடா நீயி? மணி ஆறாச்சு! இன்னும் குப்புறப் படுத்து கெடக்க?" என்று அவனிடம் வார்த்தையால் சுப்ரபாதம் பாடிய தன்னுடைய தாயின் குரல் கேட்டு அரைக் கண்களைத் திறந்து பார்த்து,

"இன்னிக்கு எங்கயும் வேலயில்ல; அதுனால எனக்கு ஒரு டம்ளர் பால் ஆத்தி வச்சுட்டு எட்டுமணிக்கு அப்புறமா எழுப்பிஉடு அமுதாம்மா!" என்று சொன்னவன் பின் அவனது ரஜாயை நன்றாக போர்த்திக் கொண்டு சுகமாக படுக்கையில் சுருண்டு கொண்டான்.

"இன்னும் செத்த நேரத்துல வதனிப்புள்ள கீழ எறங்கி வந்துடும்! இவேன் அதுக்குள்ள படுக்கையில இருந்து எழுந்துரிச்சு, வெளிய போயிருவான்னு பாத்து இழுத்து படுத்துக்கிட்டு அலும்பு பண்றானே? பயலுக்கு இன்னிக்கு காலைல எதுவும் வேலயில்ல போலிருக்கு!" என்று நினைத்த முகிலமுதம் படுக்கையில் இருந்து மெதுவாக எழுந்து அமர்ந்து, தன்னுடைய மூச்சுப்பயிற்சி, கைகள் மற்றும் கழுத்துக்கான சிறிய வொர்க் அவுட் இவற்றை எல்லாம் செய்து முடித்திருந்தார்.

தன்னுடைய வீட்டில் தங்க வந்ததற்காக அந்தச் சின்னப் பெண் பர்வதவர்த்தினி தனக்காக பாவம் பார்த்தே அவளால் முடிந்த அளவு உதவிகளை தனக்காக செய்ததாக நினைத்தார் முகிலதமும்.

அவளோ அவரிடம், "மனோம்மாவும் முகில்ம்மாவும் எனக்கு ஒண்ணு தான்! அவங்களும் இப்டிதான்! எங்கிட்ட இருந்து ஒரு ஹெல்ப் கூட வாங்கிக்க கூடாதுன்னு கடைசி வரைக்கும் நெனச்சாங்க. அப்டியே நீங்களும் நெனச்சீங்கன்னா, நான் இந்த வேலைய விட்டுட்டு சென்னைக்கே போயிடுவேன் முகில்ம்மா!" என்று சொல்ல ஒருதடவை பதறியவர் தான்.....

அதற்குப் பின்னர் அவள் செய்யும் அத்தனை விதமான உதவிகளையும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார். பல்துலக்கிய எச்சில் தண்ணீரை அவளிடம் தரும்போதும், அவள் தனக்கு பெட்பேன் வைக்கும் போதும், குளிக்க வைக்கும் போதும், குன்றிக் கூசுபவரிடம் இயல்பாக எதையாவது பேசிக் கொண்டே அவரது குன்றலை கவனிக்காதது போல் தன்னுடைய வேலைகளை முடித்து விட்டுப் போய் விடுவாள் வதனி.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now