வதனி காரில் இருந்து இறங்கி அங்கு வந்து நின்ற போது மரியம், ஜெயனுடைய நண்பர்களின் மனைவி இருவருமாக சேர்ந்து ஆரத்தி எடுத்து அவளுக்கு பொட்டு வைத்தனர்.
"ஹூ.....ம்! நாம வாரப்ப மண்டபத்தோட மேனேஜர் தான் நம்ப பக்கத்துல வந்து நின்னு கதவ தொறந்து உட்டுட்டு போனாரு..... ஒனக்கு தானா தம்பி இன்னிக்கு கல்யாணம் ஆகப்போவுதுன்னு கேட்டு ஒரு வாழ்த்து கூட சொல்லாம வெளக்கெண்ணய குடிச்சவரு மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு போயிட்டாரு! இப்ப
இந்த ஹெட்லைட்டு வாரப்ப மட்டும் இவள சுத்தி எல்லாரும் நின்னுக்கிட்டு இவளுக்கு ஆரத்தியெல்லாம் வேற எடுக்குறாய்ங்க.....!" என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ஜெயன்."ஏய்.... என்ன என் நண்பன உட்டுட்டு கல்யாணப் பொண்ணுக்கு மட்டும் ஆரத்தி எடுக்குறீங்க? இதெல்லாம் நல்லாயில்ல பாத்துக்கங்க!" என்று நஸார் சொல்ல வதனி ஜெயனுடைய முகத்தைப் பார்க்க அது களையில்லாமல் இருந்தது.
"ஏய்.... பொண்ணுதா இப்ப வெளியில இருந்து உள்ள வருது; அதுக்கு சுத்திப் போடுறோம்... ஒம்ப்ரெண்டு ஏற்கனவே உள்ள தான நிக்குறாப்ல? அவருக்கு என்னத்த சுத்திப் போடுறதாம்?" என்று சொன்ன மரியத்தை,
"வில்லி.....குள்ளச்சி! அப்புறமா தனியா கையில அம்புட்ட.... நொங்கி எடுக்கப்போறேன் பாரு!" என்று மனதிற்குள்ளாக திட்டிக் கொண்டிருந்தான் ஜெயன்.
"அதுனால என்ன மரியம்? உள்ள நிக்குறவங்கள வெளிய கூப்ட்டு பக்கத்துல நிக்க வச்சுக்கிட்டா போச்சு! ஜெயன் இங்க வா.....ங்க!" என்று அவனை அழைத்தவளிடம் அவன் "இந்தா வந்துட்டேன் வர்த்தினி!" என்று சொல்லிக் கொண்டே அவளருகில் சென்று நின்றான்.
"மரியம்.... மாரிமுத்து ஸாரோட மேடம்! நீங்க ரெண்டு பேரும் சேந்து
ஆரத்திய இன்னொருதடவ சுத்த முடியுமா? இந்தத் தடவ ஜெயனும் எங்கூட வந்து நிக்குறாரு இல்ல?" என்று வதனி மரியத்திடம் கேட்க,"இதுக ரெண்டும் செய்யுறத
பாரேன்!" என்று சொல்லி தாடையில் கை வைத்துக் கொண்ட இருவரும் மணமக்களுக்கு மறுமுறை ஆரத்தி சுற்றினர்.
ŞİMDİ OKUDUĞUN
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romantizmஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...