🌻 அழகி 73

230 12 2
                                    

"மரியம்.... என்ன இதெல்லாம்? எதுக்கு இத்தன பேர கூப்ட்டு இவ்ளோ க்ராண்டா நிச்சயம்? எப்டி பாத்தாலும் அம்பது அறுபது பேர் வந்துடுவாங்க போலிருக்கே?" என்று அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளின் எண்ணிக்கையை மனதிற்குள்ளாக கணக்கிட்டு மரியத்திடம் கேள்வி கேட்டாள் வர்த்தினி.

"இது கூட இல்லாம எப்டிங்க பேங்க் அம்மா? நீங்க எங்களுக்கு குடுத்த ஐடியாவுல தான் அந்த லூசுப்பய நஸாரு பழய வண்டிங்கள எல்லாம் கடாசிட்டு சைனப் டிராவல்ஸுல புது வண்டியெல்லாம் எறக்கி கடன் முழுசையும் கட்டி முடிச்சுருக்கான்! எத்தன வருசமா அவனோட வியாபாரத்துல மட்டுந்தான் நா சேத்து வச்ச பணத்த போடணும்னு நெனச்சு பூதம் மாதிரி பணத்த காத்து வச்சுக்கிட்டு இருந்தேன் தெரியுமா?"

"ஒங்கிட்ட பேசுன பெறவு தான் இந்த நஸாருப்பயலுக்கு தன்னோட தப்பு கொஞ்சம் ஒரைக்கவே செஞ்சுச்சு! எல்லாம் நல்லபடியா ஸெட் ஆகி இப்ப நாங்க எங்க வேலையப் பாத்துக்கிட்டு நிம்மதியா இருக்குறதுக்கு காரணமே நீயும் ஜெயனுந்தான்.....!" 

"ஒனக்காக எல்லாரையும் ஒண்ணா தெரட்டுறதுக்கு நாலு போனப் போடுறதுல என்ன கொறஞ்சு போயிடப் போவுது? பாரு புள்ள......
நஸாரோட அம்மியும் கொஞ்ச நேரத்துல இங்க வரும்; வந்து வழக்கம்போல எதுக்கு இப்டி கண்ணு மண்ணு தெரியாம காச அள்ளி கொட்டுற அது இதுன்னு நஸாருப்பய கிட்ட எதாவது பேசும்! நீ வழக்கம்போல அதோட பேச்ச காதுலயே வாங்காத மாதிரியே இருந்துக்க என்ன?"

"பேங்க்ல வேல பாக்குற ப்ரெண்ட்ஸ்ல அச்சதன் ஸாரும் நாலஞ்சு பேரும் வருவாங்க வதனி.... நீ செய்ய வேண்டியதெல்லாம் மொகத்த சிரிச்சாப்லயே வச்சுக்கிட்டு இன்னிக்கு பங்ஷன நல்லா என்ஜாய் பண்ண வேண்டியது தான்.... சரியா; ஏதோ
எனக்கு தெரிஞ்ச மேக்கப்ப செஞ்சு உட்டுட்டேன்! இதுலயே நீ அம்புட்டு அழகா இருக்க தெரியுமா?" என்று கூறி வதனியை கன்னம் வழித்து நெட்டி முறித்தாள் மரியம்.

"என்ன சொல்றதுன்னு தெரியல...... பட் நீயும் நஸார் ஸாரும் எங்களுக்கு செய்றதுக்கெல்லாம் ரொம்ப தேங்க்ஸ் மரியம்! பிள்ளைங்க மூணு பேரையும் எங்க? வீட்லயா இருக்காங்க?" என்று மரியத்திடம் கேட்டாள் வதனி.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now