🌻 அழகி 64

241 13 2
                                    

மதியம் நண்பனுடைய வீட்டில் சாப்பிட்டு விட்டு, வதனியை கொண்டு போய் வீட்டில் விட்டவன் வீட்டில் சற்று நேரம் அமுதாம்மா, கோமதி, இளங்கோ அனைவரிடமும் தன்னால் முடிந்த அளவிற்கு தொல்லையைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

இரவு எட்டரை மணியளவில் நண்பனுடைய வீட்டுச்சாவி தன்னிடம் இருக்கும் நினைவு வரவும் நஸாருக்கு கூப்பிட்டு அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்க நஸார் கடையில் தான் இருப்பதாக சொல்லவும் ஜெயன் நேராக அங்கு சென்று விட்டான்.

"இன்னிக்கு எங்க எல்லாருக்கும் லீவுன்னு சொல்லிட்டு, நீயும் மொத ஆளா வீட்டுக்கு ஓடிட்டு இப்ப இங்க வந்து ஒக்காந்துக்கிட்டு என்னடா பண்ற?" என்று கேட்டு வீட்டுச்சாவியை நீட்டிய ஜெயனிடம் ஒன்றும் பேசாமல் சாவியை வாங்கிக் கொண்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் நஸார்.

"நீ ஷட்டர சாத்திட்டு எங்கூட வெளிய வா சொல்றேன்!" என்று சொன்னபடி தன் நண்பனுடைய சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தவனிடம்,

"அட இருடா; வந்து தொலையுறேன்!" என்று சலித்துக் கொண்ட நஸார் தன்னுடைய பைக் சாவியை எடுத்துக் கொண்டு
கடையின் கதவை பூட்டுவதற்கு ஆயத்தமானான்.

கடையைச் சாற்றி விட்டு பைக்கை நிறுத்தும் இடத்திற்கு பக்கத்தில் இருந்த கல்பெஞ்சில் இருவரு‌ம் சென்று அமர்ந்து கொண்டனர்.

"அங்கங்க அப்டி அப்டியே எல்லாரையும் அத்து உட்டுட்டு ஓடிர்றது? மரியத்தையும் புள்ளைங்களையும் வீட்ல கொண்டு வந்து விட்டுட்டியா இல்ல எங்கள பாதியில அத்து உட்டுட்டு ஓடுனாப்ல அதுங்களயும் ரிஸாட்டுலயே உட்டுட்டு வந்துட்டியா?"

"உங்க அம்மா ஊருக்குப் போயிருக்குதேன்..... நீங்க ரெண்டு பேரும் இப்பத்தா கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியும்.... அதெல்லாம் சரித்தே; ஆனா எதுக்குடா எங்க ரெண்டு பேரையும் அநாவசியமா ஒங்க வீட்டுக்கு வர வச்சுட்டு உட்டுட்டுப் போன?" என்று கேட்ட ஜெயனிடம் பதிலளிக்காமல் வெறுமனே உச்சுக்கொட்டினான் நஸார்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now