'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -49

402 11 0
                                    

49

தூங்கப் போன சீதாலட்சுமியும், நீலாவும் மாடிப்படிகளில் ஏறி வந்து, ஓசை இன்றி இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

"நீலா பார்த்தியா உன் பொண்ணு பண்ற அழும்பை? அவன் இடத்துல வேற ஒருத்தனை நினைச்சுப் பார்! இப்படி எல்லாம் உன் பொண்ணு வாயை விடுவாளா?" சீதாலட்சுமி அடிக்குரலில் கோபமாக கேட்டார்.

நீலாவுக்கு மகளின் மனநிலையை நினைத்து கவலை சூழ்ந்து கொண்டது. அதே நேரம் ஆர்வினின் பதிலும் அவனது பொறுமையும் ஆச்சர்யமாக்க,

"ஆர்வின் அவளை கையாளும் விதத்தை பாருங்க அத்தை..".

"ஆமா அவள் வழியிலேயே போய் அவளை மடக்குறான்...நீ பாரு கூடிய சீக்கிரம் அவன்கிட்டே உன் பொண்ணு விழுந்திடுவா ..."

"இவ்ளோ நடக்குது உங்க மகன் எவ்ளோ நிம்மதியா தூங்கிட்டு இருக்கார்னு தெரியலை?"

"ம்.. அவனுக்கு அவன் மாப்பிளை மேல அவ்ளோ நம்பிக்கை. அதில் எனக்கும் சந்தேகம் துளி கூட இல்லை. நீலு..! இவளை விட்டுத்தான் பிடிக்கணும்.. நாம மூக்கை நீட்டுற இடத்துல நீட்டுவோம்! நீ வா" என அவர் போக, நீலாவும் மேலே பார்த்து கும்பிட்டவள்,

"கல்யாண வீடு போலவா இருக்கு? இந்நேரம் எப்படி இருக்கணும்? ஆண்டவா ஒரு வழியை காட்டு" என்று முணுமுணுத்தவாறு போனாள்.

நந்தனா பலத்த யோசனையில் இருந்ததை பார்த்து.
"டாக்டர் ஏதாச்சும் பாய்சன் இன்ஜெக்ஷன் போட்டு என்னை kill பண்ண பிளான் போடாதீங்க...மீ என் பேரண்ட்ஸுக்கு ஒரு பையன்.. என்னை சாகடிச்சுடாதீங்க! நான் வாழணும்" என அவன் அவன் கலங்கும் குரலில் அவளது சிந்தனையை கலைக்க, அவள் திடுக்கிட்டு,

"டேய்" என எட்டி அவன் சட்டையை பிடித்தவள் குனிந்து,

"உன் வாயில எதுவேனா பேசுவியா? இழுத்து வைச்சு தைச்சுடுவேன்" என மிரட்டினாள்.

அவளது நெருக்கம், அவனுக்குள் ஒருவித கிறக்கத்தை உள்ளுக்குள் தட்டி எழுப்ப,

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now