'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -20

370 8 0
                                    

20

விமல் நண்பர்களுடன் நந்தனா வீட்டுக்கு வந்திருந்தான். மாடியில் வட்ட மாநாடு போட்டு இருந்தார்கள்.  ஹாஸ்பிட்டல் பிளானிங் ஒன்று மிகவும் பிடித்துப்போக அதை மேலும் சிறப்பாக வடிவமைக்க முடியுமா? என நந்தனா இரவு தூங்கும் போதும் மைண்டுக்குள் போட்டு , போட்டு யோசித்துக்கொண்டிருந்தாள் எனலாம்.

ஆர்வினும் அவளை நெருங்குவதில்லை. என்றாலும் அவளது ஒவ்வொரு அசைவையும் அவன் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாது ரசித்தான்.

அவள் நண்பர்கள் கூட  இருக்கும் பொழுது மிகவும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதை உணர்ந்து கொண்டான்.

தன்னை அவள் பிரண்டாக ஏற்க மறுத்ததுக்கு காரணம் அவளது நண்பர்களுக்கும், தனக்கும்  ஆறு வித்தியாசம் இல்லை. அறுபது வித்தியாசம் என அறிந்து கொண்டவன், உதடு புன்னகையை தவழ விட்டது.

"என்னை டிபெரெண்டான ஒரு பிரண்டாக  வெச்சுக்கலாம் உன் சிஸ்டர்" என  சிந்துஜாவிடம் சொல்லி  விட்டு  தனதறை பால்கனியில்  பாரிஸுக்கு வீடியோ கால் போட்டு பேசிக்கொண்டிருந்தான். 

சத்தியன் நந்தனாவிடம் மகன் எந்தளவுக்கு நெருங்கி இருக்கிறான் என அறிய துடித்தார். அவனோ பிடி கொடாமல் பேச அவர் பொறுமை இழந்து,

"ஆர்வின் ...உண்மையை சொல்லுப்பா அவ உன்னை அக்செப்ட் பண்ணிட்டாளா? இல்லையா? எனக்கு பிபி  ஏறுது !"

"டாட் அவள் என்னை புரிந்துகொள்ள சிக்ஸ் மந்த் போதாது டாட்!" என்றான் யோசனையாக. அவர் முகம் கவலைக்கு போக,சுதாரித்தவனாக,

"என்ன அர்ஜென்ட்? அவ கூட இருக்கேன்.. அவளை டெயிலி பார்த்துகிட்டு இருக்கேன்..  இங்கு தமிழையும், கல்ச்சரையும் கற்றுக்கொண்டு கூடவே மாமாவுக்கு பிசினஸ்ல ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன். நனு ஹாஸ்ப்பிட்டல் கட்டுற பிசியில இருக்கா.. அந்த அரேஞ்ட்மெண்ட்ஸ் முடியட்டும்.. அப்புறம் நான் ப்ரொபசலே பண்ணிடுறேன்.. அவ சம்மதத்தோடு மேரேஜ் முடிவு பண்ணிட்டு உங்களை  காண்டாக்ட் பண்றேன்.. நீங்க பிளைட்  ஏறுவது தான் பேலன்ஸ்" என நம்பிக்கை கொடுத்தான் .

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now