மித்ரன் ஹரிஷிடம் கேள்வி கணைகளை தொடுத்து கொண்டிருந்தான். “எப்டி வெளில வர முடியும்? தீபிகாக்கு உதவி பண்ற லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கனு செக் பண்ணுங்க. அத்தனை பேரும் தீபிகா தப்பிச்ச நேரத்துல, என்ன பண்ணாங்கனு, எல்லாம் கலெக்ட் பண்ணுங்க”
“அவங்க தொழில்ல உதவி பண்ற எல்லார பத்தியும் என்கிட்ட டீடெயில்ஸ் இருக்கு சார். இன்னும் கொஞ்ச நேரத்துல அத்தனை பேரும் எங்க இருந்தாங்கனு அனுப்புறேன்” என கூறி வைத்தான்.
அழைப்பை துண்டித்த பின் இருக்கையில் சாய்ந்தமர்ந்து, விட்டத்தை வெறித்தபடி யோசித்தான். “யாரு ஹெல்ப் பண்ணிருப்பா? மீடியா பக்கம் பார்வை திரும்பினதுமே, அவங்க கூட பிசினஸ் செஞ்ச பாதி ஆளுங்க ஒதிங்கிட்டாங்க. ஒருவேளை அவங்க ஹஸ்பன்ட் உதவி பண்ணிருப்பாரோ” என சந்தேகம் எழுந்தது. “சரி ஹரிஷ் கிட்ட, அவரையும் நோட் பண்ண சொல்லலாம்” என முடிவெடுத்து, அலுவலக வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
🌻🌻🌻🌻
டெல்லியில்.......
“ப்ரோ, இவங்க ரெண்டு பேரையும் என்ன பண்றது?”
“நானே இவங்க கதைய முடிக்குறேன்”
“வேணாம். இவங்க ஆளுங்கள அடிச்சு போலீஸ்க்கு தகவல் குடுத்த மாதிரி, கதையை முடிச்சிடலாம்” என்றான் ப்ரஜன், எங்கே தன் நண்பன் இதனால் ஜெயிலிற்கு போக நேரிடுமோ என்று.
“நான் மாட்டிக்கிட்டா.. ஜெயிலுக்கு போகிடுவேன்னு யோசிக்குறியா?”
YOU ARE READING
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.