மித்ரன் வீட்டிற்குள் சிரித்துக் கொண்டே நுழைந்தான்.
"அண்ணா, என்ன வரும்போதே சிரிச்சிட்டே வரீங்க?" என ரித்திகா கேட்டாள்.
"ஒன்னும் இல்லம்மா, ஆபீஸ்ல நடந்த ஒன்ன நெனச்சேன், சிரிப்பு வந்துட்டு. எங்க கீர்த்தியை காணோம்" என பேச்சை மாற்றினான்.
"அவ டிராயிங் கிளாஸ்க்கு போகிருக்கா அண்ணா, எனக்கு போர் அடிக்குது, அதான் நீங்க வந்ததும் கேரம் விளையாடலாம்னு வெயிட் பண்றேன்."
"சரிடா, குளிச்சிட்டு வரேன். நாம விளையாடலாம்."
அதற்குள் கௌசல்யா, "அவனே இப்போதானேடி வரான், வந்ததும் நீ விளையாட கூப்டுற" என்றார் மனதாங்களுடன்.
ரித்தியின் முகம் வாடவும், “எனக்கு வேலை இன்னைக்கு ரொம்ப இல்லமா. நீங்க டீ மட்டும் குடுங்க, அத குடிச்சா டயர்ட் எல்லாம் போய்டும்"
"சரிப்பா. போய் குளிச்சிட்டு வா."
மித்ரன் 15 நிமிடத்தில் வந்ததும், டீ குடித்துக்கொண்டே கேரம் விளையாடினான்.
YOU ARE READING
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.