"ரெஸ்ட் எடுத்துக்கோ பாப்பா" என்ற லதாம்மாவிடம், "எனக்கு ஒன்னும் இல்லம்மா.. நான் ஆபீஸ் போறேன். பை" என கூறி, மறுநாளே வேலைக்கு வந்துவிட்டாள் ஆதிரா.
"ஹே என்னாச்சு.. என்னப்பா அடிபட்டிருக்கு" என நலம் விசாரித்தவர்களுக்கு, சின்ன சிரிப்புடன் “ஒரு குட்டி ஆக்ஸிடெண்ட்” என பதில் சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்தாள்.
கொஞ்ச நேரத்தில் அவளிடத்திற்கே வந்த மித்ரன், "ஹே ஆதி.. நான் தான் லீவ் எடுத்துக்க சொன்னேன்ல. ஏன் இன்னைக்கே வந்த?" என்றான் அக்கறையாக.
"பெருசா அக்கறை காட்ட வந்துட்டான்" என மனதில் அவனை அர்ச்சித்து, வெளியில், "சின்ன காயம் தான் சார். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை."
சற்று நேரம் அமைதியாக அவளையே பார்த்தவன், "நேத்து அர்ஜுன் சொன்னதுபோல, உனக்கு முன்னாடியே, இது என்னோட அப்பா ஆஃபீஸ்ன்னு தெரியாதா?" என கேட்டான்.
இப்போது அவனை நன்றாய் முறைத்து, "எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல சார். நேத்தே நாம இதப்பத்தி பேசி முடிச்சிட்டோம். இப்போ இது தேவையில்லாத விஷயம். எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றாள் முகத்தில் அடித்ததுபோல்.
YOU ARE READING
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.