கண் திறந்த ஆதி அங்கே மித்ரனையும் அர்ஜுனையும் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை😧😧. கைவலியும் மீறி அவள் முகத்தில் பயம் தெரிந்தது. மிகவும் சிரமத்துடன், “அஜூ உன்னை யார் இங்க வர சொன்னா? நீயும் இவரும் , முதல சென்னைக்கு கிளம்புங்க “ என்றால் மன்றாடும் குரலில்.
அதற்குள் மித்ரன், “ஏன் ? நாங்க இனி உன் கூடத்தான் இருப்போம். உன்னை இங்க விட்டுட்டு போகுற ஐடியா இல்ல “
“ப்ளீஸ் சார், இது உங்க ஆபீஸ் இல்ல. எங்க வீட்டுல இருந்து வரதுக்குள்ள கிளம்பிடுங்க” என்றால் மறுபடியும்.
மித்ரன் சிரித்துக்கொண்டே, “என் பொண்டாட்டி டெல்லில தான் இருக்கா.. அவ வந்ததும், நாங்க கிளம்பிடுவோம் ”
ஆதி அதிர்ச்சியுடன் “மித்ரனுக்கு கல்யாணம் ஆகிட்டா ?? நான் கிளம்பி வந்ததும் கல்யாணம் பண்ணிருக்கான் போல, என் மேல கொஞ்சம் கூட பீலிங்ஸ் இல்ல.. நான்தான் பைத்தியம் மாதிரி இவன்கூட வாழ முடியலனு கையை வெட்டி சாக நினைச்சிருக்கேன்..ச்ச."
இவள் ஏதோ ஏடாகூடமா நினைப்பதை பார்த்து அர்ஜுன், “டேய் மச்சான், போதும்டா, இன்னும் சுத்திவளைச்சு பேசி குழப்பம் செய்யாத” என்றான்.
மித்ரனுக்கும் அதுவே சரியாகப்பட, ஆதியிடம், “ இப்போ உனக்கு பரவாலயா பொண்டாட்டி, நாம கிளம்பலாமா ?”
YOU ARE READING
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.