அர்ஜுன் இல்லத்தில் அவன் தாய் கமலாவும், தங்கை கார்த்திகாவும் சமைத்துக்கொண்டிருக்க, ஆதி அதை வாசம் பிடித்துக்கொண்டே, சமயலறையில் நுழைந்தாள். "சூப்பர் கமலாம்மா. உங்க சமையலுக்கு நான் அடிமை. எப்டி இவ்ளோ சூப்பரா சமைக்குறீங்க? வாசம் வாசல் வரை வருது" என ஒருமுறை அனைத்து பாத்திரத்தையும், திறந்து மோப்பம் பிடித்தாள்.
அங்கு வந்த அர்ஜுன், அவள் தலையில் செல்லமாய் கொட்டி, "சாப்பிட மட்டும் செய்யாம, கொஞ்சம் சமைக்கவும் செஞ்சா நல்லா சமைக்கலாம்" என்றான் நக்கலாய்.
"எல்லாம் புருஷனுக்கு ஆக்கிப் போடணும்னா, தானா சமைப்பீங்க" என்று கமலா கிண்டல் செய்தார்.
"என் புருஷன் தான், எனக்கு சமைச்சு போடணும். மத்த எதும் அவன்கிட்ட, நான் எதிர் பார்க்க மாட்டேன்பா." என்றாள் பதிலுக்கு.
"ஹ்ம்ம் ஹ்ம்ம். இப்படி சொல்றவங்கதான், புருஷனுக்காக பார்த்து பார்த்து செய்வாங்க." இப்போது கார்த்திகா கலாய்த்தாள். இதையெல்லாம் வரவேற்பறையில் இருந்து ரசித்து கேட்டான் மித்ரன்.
YOU ARE READING
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.