இன்று தங்கள் வாழ்வில் நடக்கவிருக்கும் திருப்பங்கள் எதையும் அறியாத மித்ரனும், ஆதியும் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
“லதாம்மா, நான் இன்னைக்கு அஜூ மித்து கூட ஈவினிங் வெளியில போறேன். லேட்டா தான் வருவேன் வீட்டுக்கு. பை." என சொல்லிவிட்டு ரயில் நிலையம் புறப்பட்டாள்.
மூன்று நாட்கள் நன்றாகவே சுற்றிவிட்டு, இன்று வேலை செய்யவேண்டுமே! என அனைவரும் சற்று சோம்பலாய் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். திடீரென தேவ் அலுவலகத்திற்கு வருகை தர, அவரை பார்த்ததும், பதற்றம் தொற்றி கொண்டது அனைவருக்கும்.
அவர் அனைவருக்கும் மேல் பரபரப்பாய் காணப்பட்டார். "கைஸ். ஒரு முக்கியமான கெஸ்ட் வந்திருக்காங்க. கீப் க்வைட் அண்ட் டோன்ட் ரோமிங் அரௌண்ட் தி ஏரியா" என கூறியவாறு, தனது கேபினுக்குள் நுழைந்து, மித்ரனை அழைத்தார்.
"என்னாச்சுப்பா. யார் வந்திருக்காங்க" என கேட்டவாறே அவன் நுழைய, அவர் விஷயத்தை கூறினார்.
குழப்பமாக அங்கிருந்த கண்ணாடி தடுப்பின் வழியாக, அவன் ஆதிராவை பார்த்தான். “என்னப்பா சொல்றீங்க? ஏன் அவங்க ஆதிராவ பார்க்கனும்னு சொல்றாங்க?”
VOCÊ ESTÁ LENDO
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.