💞33💞

715 39 3
                                    

மாலையில் முதலில் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு மித்ரனுடன் சென்றுவிட்டு, பின் பீச்சிற்கு வந்தனர்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

மாலையில் முதலில் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு மித்ரனுடன் சென்றுவிட்டு, பின் பீச்சிற்கு வந்தனர். அலையில் இருவரும் கை கோர்த்து சற்று நேரம் நடந்தனர். மனம் லேசாக, கை நிறைய உப்பு நீரை அள்ளி, மித்ரன் மேல் தெளித்தால்.

“ஹே.. என்னடி இப்படி பண்ணிட்ட.. உன்ன....” என அவள் மேல் நீரை வாரி இறைத்தான். இப்படியே இருவரும் மாறி மாறி விளையாடி நேரம் கடத்தினர். உடையை காய வைக்க அங்கேயே கொஞ்சம் நேரம் காற்றில் நின்றபடி அலையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

“மித்து.. வீட்டுக்கு போலாமாடா?” 

“அதுக்குள்ள என்ன அவசரம்? வேற எங்கேயும் போலாமா?” 

“லேட் ஆச்சே”

“அர்ஜுன், கதிர் கல்யாண வேலைல நான் பிஸி ஆகிட்டேன். இப்போதான் நேரம் கிடைச்சது. இன்னைக்கு ஃபுல்லா... மித்ரன் இஸ் யுவர்ஸ். ஸோ நாம மால்கு போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு, தென் டின்னர் வெளில சாப்டுட்டு அப்புறம் வீட்டுக்கு போலாம் ஓகே?” 

“டபுள் ஓ.கே”

போகும்போது காரை ஒரு பெரிய துணி கடைக்கு முன் நிறுத்தினான். கேள்வியாய் ஆதி பார்க்க, “உன் டிரஸ்லாம் மண்ணா இருக்கு. வா வேற மாத்திக்கலாம்” என அவனே அவளிற்காக பார்த்து பார்த்து தேர்வு செய்தான். பின் மாலிற்குள் பேசி சிரித்தபடி நுழைகையில், கார்த்திகா எங்கிருந்தோ வந்து,

“ஹே ஆதி, அண்ணா. நீங்க எங்க இங்க?” 

“ஏண்டா? கதிர் இந்த மால்ல உனக்கு வாங்கி குடுத்துட்டாரா? நாங்கலாம் வர கூடாதா?”

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now