❣️29❣️

758 39 1
                                    

ஜம்பமாய் தோழிகளுடன் படுத்துக் கொள்கிறேன் என கூறிவிட்டாலும், ஆதியால் தூங்க முடியவில்லை

ओह! यह छवि हमारे सामग्री दिशानिर्देशों का पालन नहीं करती है। प्रकाशन जारी रखने के लिए, कृपया इसे हटा दें या कोई भिन्न छवि अपलोड करें।

ஜம்பமாய் தோழிகளுடன் படுத்துக் கொள்கிறேன் என கூறிவிட்டாலும், ஆதியால் தூங்க முடியவில்லை. மனம் குழப்பமாய் இருந்த நேரத்தில் கூட, இந்த ஐந்து நாட்கள் மித்ரனின் அருகில் படுத்து பழகியதால்.. இப்போது தூக்கம் வர மறுத்தது.

“ச்ச.. பேசாம நான் அவன் ரூம்லே இருந்திருக்கலாம்.. ஷீலுவே அமைதியா தூங்கிட்டா.. நான்தான் அவளை தனியா விட பயந்து, இங்க படுத்துக்குறேன்னு சொல்லிட்டேன்.  பேசாம, அவன் ரூம்ல போய் படுத்துட்டு, காலைல சீக்கிரம் எழுந்து வந்து, இந்த ரூம்ல படுத்துக்கலாமா??” என யோசனை வந்தது.

நேரம் செல்ல செல்ல அதுவே சரியெனப்பட, பூனைநடை நடந்து மித்ரன் அறைக்குள் நுழைந்தாள்.

மித்ரன், கதிரிடம் பேசிவிட்டு அறைக்குள் வந்து படுத்து இரண்டு நிமிடம் ஆகியிருக்கும்.. திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்க, யாரென்று பார்த்தான். அறைக்குள் விழுந்த நிலவொளியில், அது ஆதி என கண்டுகொண்டு, கண்ணை மூடியபடி தூங்குவதுபோல் 😴😴 படுத்துக் கொண்டான்.

மெல்ல அவனருகில் வந்து மண்டியிட்டு, “😠😠லூசு, எப்படி தூங்குறான் பாரு.. எனக்கு மட்டும் தான் இவன் பக்கத்துல படுக்காம தூக்கமே வரலபோல” என புலம்பினாள்.

வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு, அவள் பேசுவதை கவனித்தான்.  "தூங்கும்போது கூட நீ க்யூட்😍😍 டா.. வெளிப்பார்வைக்கு மட்டும் இல்ல, மனசளவுலையும்💞 நீ ரொம்ப அழகானவன் தான்”

“எப்படிடா! பாவ பட்டு கல்யாணம் பண்ணிருந்தாலும் எனக்காக, நான் கனவுல கூட நினச்சு பார்க்காத எல்லாம் தர? உன்னோட அன்பான ஃபாமிலில.. என்னையும் ஒருத்தியாக்கிட்ட, என் அம்மா அண்ணானோட அன்ப.. மீட்டு தந்திருக்க, எனக்காக யோசிச்சு நிறைய பண்ற.. ஆனா உனக்காக, நான் ஒண்ணுமே பண்ணல☹️☹️..

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें