கீழே விழுந்த ஆதியை மடியில் ஏந்திக்கொண்டு "ஆரூ.. உன் மித்து வந்திருக்கேன்டி.. என்னை பாரு.. உன்ன இந்த நிலமைல பார்க்கவா நான் அவ்ளோ ரிஸ்க் எடுத்து வந்தேன்.. ஐயோ ரத்தம்.. டேய் அர்ஜுன்.. வண்டிய எடுடா ஹாஸ்பிடல் போலாம்" என அவளை கையில் அள்ளிக்கொண்டு வெளியில் ஓடினான்.
சிவநேசனும் அவர் குடும்பமும் மித்ரன் அர்ஜுன் இருவர் பின்னே ஓடினர். சிவநேசனுக்கோ “யார் இவர்கள்” என சந்தேகம். சாரதா ப்ரஜனிற்கோ “இவங்க ரெண்டு பேரும் எப்படி ஏன் வந்தாங்க?” என சந்தேகம்.
ஆனால் யாருக்காகவும் மித்ரன் நிற்காமல் ஆதியை காரில் ஏற்றி கிளம்பிவிட்டான். மற்றவர்களும் அவன் கார் பின்னே இன்னுமொரு காரை எடுத்துக்கொண்டு சென்றனர்.
"உனக்கு ஒன்னும் ஆகாதுடி.. நாம சேர்ந்து சந்தோஷமா இருக்கலாம்.. ப்ளீஸ்டி கண்ணை திறந்து பாரு.. இதுபோல் பைத்தியக்காரதனமா ஏண்டி செஞ்சிட்டே இருக்க?? அன்னைக்கு தண்ணீல குதிச்ச.. இன்னைக்கு இப்படி கைய வெட்டிருக்க.. நீ எழுந்து வரப்போ கண்டிப்பா என் கையால அடி இருக்கு உனக்கு" இப்படி ஹாஸ்பிடல் வரும் வரை அவளிடம் உரையாடிக்கொண்டே வந்தான்.
அர்ஜுன் காரை நிறுத்திவிட்டு வேகமாய் ஸ்ட்ரெக்சர் எடுத்து வந்தான், மித்ரன் ஆதியை படுக்க வைத்து "டாக்டர்...” என கத்தினான். இவன் சத்தத்தில் அங்கிருந்தோருக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது..
செவிலியர் உதவியுடன் ஆதியை அழைத்துச்சென்றனர்.. “ நீங்க கொஞ்சம் வெளில இருங்க சார்" என்று ஐ.சி.யு-விற்குள் மறைந்தனர்.
YOU ARE READING
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.