உடை கூட மாற்றாமல், இருளை வெறித்தபடி பால்கனியில் நின்றிருந்த மித்ரனிடம்,எப்படி பேச்சை ஆரமிப்பது என தடுமாறியபடி மெதுவாய் “மித்து..”
“ப்ளீஸ் ஆதி.. என்னை டிஸ்டர்ப் பண்ணாத”அவனை நெருங்கி பின்னிருந்து அணைத்துக்கொண்டாள். இருகியிருந்த அவனது உடல், மெல்ல தளருவதை உணரமுடிந்தது.
“😔சாரிடா.. நான் ஏதோ சட்டுனு சொல்லிட்டேன். இனி அப்படி சொல்லல.. என்கூட எப்போவும் போல பேசு”“சரி பேசுறேன்.. நீ நகரு”
“உனக்கு இன்னும் கோவம் போகல. அதான், என்னை ஆரூனு கூப்பிடமாற்ற”
🙂🙂இதழுக்கடியில் சிரிப்பொன்று முளைத்தது மித்ரனிற்கு. இருப்பினும் அவள்கூறிய வார்த்தை அவன் மனதை தைக்க, விறைப்பாய் நின்றுகொண்டு பேச ஆரம்பித்தான். “நான் முன்ன உன்னைய வார்த்தையால நிறைய கேவலமா பேசியிருக்கேன்தான்.. ஆனா, கல்யாணம் ஆன பிறகு உன்கிட்ட நான் முன்ன மாதிரி நடந்துக்கிட்டது இல்ல.. அப்புறம் ஏன் நீ என்னை விட்டு போறதுலே இருக்க?”
இப்பொழுது “நீ பாவம் பார்த்து என்னைய கல்யாணம் பண்ண, உனக்கு என்மேல லவ் இல்ல”னு சொன்னா அவ்ளோதான் என மனதிற்குள் நினைத்தபடி, “அதான் சாரி சொல்லிட்டேன்ல மித்து” என சமாளித்தாள்.
“நீ என் பணத்தை பார்த்து லவ் பண்ணேன்னு நான் சொல்லிருக்கேன், உன் மனசுல இப்போ நான் உன் வசதி பார்த்து தான் கல்யாணம் பண்ணிருக்கேன்னு தோணுதுல.. அதான் என்னைய வெறுக்குற.. அப்படித்தானே?”
YOU ARE READING
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.