💞35💞

760 36 1
                                    

மதுரை பேருந்து நிலையம் அடைந்ததும், அங்கிருந்து டாக்ஸி பிடித்து தரமான ஹோட்டல் ஒன்றில் தங்கிக்கொண்டாள்

К сожалению, это изображение не соответствует нашим правилам. Чтобы продолжить публикацию, пожалуйста, удалите изображение или загрузите другое.

மதுரை பேருந்து நிலையம் அடைந்ததும், அங்கிருந்து டாக்ஸி பிடித்து தரமான ஹோட்டல் ஒன்றில் தங்கிக்கொண்டாள். மனம் கனக்க எதுவும் சாப்பிடாமல் விட்டத்தை வெறித்தபடி படுத்துக்கொண்டு, “மித்துக்கு என்மேல கோபம் வந்திருக்கும் இந்நேரம், அவன்கிட்ட சொல்லிருந்தா ஒருவேளை அவனே  எல்லாத்தையும் சால்வ் பண்ணிருப்பான். நான் அவசர பட்டிருக்க வேணாமோ” என குழம்பி தவித்து கொண்டிருந்தாள்.

“இல்ல, என்னால தான் அந்த ரேஷ்மா கீர்த்திய இப்படி பண்ணான்னு நாளைக்கு அத்த மாமாக்கு தெரிஞ்சா... அவங்களே என்னைய வெறுத்திடுவாங்க, அதுக்கு நான் தூரமா வந்து அவங்க எல்லாம் சந்தோஷமா இருந்தா எனக்கு போதும்”

அவள் மனமோ, “மித்து நான் இல்லாம சந்தோஷமா இருப்பானா?” என கேள்வி கேட்க, அதற்கான பதில் தான் ஆதிக்கு தெரியவில்லை. அப்படியே உறங்கியும் விட்டாள்.

மறுநாள் குளித்து கிளம்பி ஒரு பள்ளிக்கு சென்றாள். தலைமை ஆசிரியர் என்றிருந்த அறைக்கு முன் நின்று, “எக்ஸ்க்யூஸ் மீ” என்றாள்.

“எஸ் கம் இன்” 

“குட் மார்னிங் மேம்.. இங்க மியூசிக் டீச்சர் போஸ்ட்கு ஜாப் இருக்குனு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்”

“எஸ்” என அவருக்கு தேவையான தகவல்களை கேட்டார். அவருக்கு திருப்தியாக இருக்க, வேலையில் சேர்ந்து கொள்ளுமாறு ஆதியிடம் கூறினார். ஆதியும் அன்றே வேளையில் தன்னை திணித்துக்கொண்டாள். மித்ரன் ஞாபகத்திலிருந்து தன்னால் வெளி வர முடியாமல் நேற்றிலிருந்து அவள் தவித்துக்கொண்டிருக்க, அங்கு மித்ரனோ அதற்கு மேல் இருந்தான்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Место, где живут истории. Откройте их для себя