💟12💟- corrected

848 43 1
                                    

வீட்டிற்கு வந்த மித்ரனுக்கு கோபம் அடங்கிய பாடில்லை

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

வீட்டிற்கு வந்த மித்ரனுக்கு கோபம் அடங்கிய பாடில்லை. நேராக தனது ரூமிற்கு சென்று கதவை அடைத்து,  "எப்படியெல்லாம் என்னைய ஏமாத்திருக்கா! ஆபீஸ்ல ப்ராஜெக்ட் பத்தியெல்லாம்  தெரிஞ்ச எனக்கு, ஒரு சின்ன பொண்ணு என்னை ஏமாத்தினத கண்டுபிடிக்க முடியலையே." என தன்னையே திட்டியவாறு, விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான்.

"இல்ல. ஆரம்பத்துல எனக்கு சந்தேகம் வந்தது. அப்பா சொன்னதும், நான் அத அப்படியே விட்டுட்டேன். அர்ஜுன் கிட்டவும் பாசமா பேசுனதால, நான் அவள ரொம்ப நம்பிட்டேன்

"இப்போதானே தெரியுது. எல்லாம் பிளான் செஞ்சு பண்ணிருக்காஎவ்வளவு திமிரு இருந்தா, என்கிட்ட லவ் சொல்லுவா" என்றவன் எதிரில் இப்போது ஆதி இருந்திருந்தால், ஒரு அரை விட்டிருப்பான்.

ஒரு கட்டத்திற்குமேல் கோபம் அழுகையாய் மாறி, கதறி அழுதான். "ஏன்டீ நீ நல்லவளா இல்ல! எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். இன்னும் கொஞ்ச காலம் போகிருந்தால், நான் உன்ன லவ் கூட செய்திருப்பேன். என்னைய போய், பணத்துக்காக லவ்னு சொல்லி ஏமாத்த பார்த்துட்ட. இவ்ளோ தப்பு பண்ணியும், எனக்கு நீ வேணும்னு தோணுது. ஏண்டி என்னைய ஏமாத்துன" என அழுதவன், திடீரென எழுந்தமர்ந்தான்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now