வரவேற்பறையில் ஷீலா, கதிர், ஆதியின் குடும்பத்தினர் என அனைவரது உடமைகளும், தயார் நிலையில் இருந்தது.
தேவ் வருத்தத்துடன் பேசி கொண்டிருந்தார். “நம்ம வீடே நேத்து சந்தோஷமா நிறைஞ்சு இருந்தது.. ஆனா இன்னைக்கே எல்லாரும் கிளம்பணும்னு சொல்றீங்க.. இன்னும் ஒரு வாரமாச்சும் இருந்துட்டு போகலாம்ல?”
சாரதா உடனே, “ நாங்க சென்னைல செட்டில் ஆகலாம்னு முடிவெடுத்திருக்கோம் அண்ணா, அந்த வேலைய எவ்ளோ சீக்கிரம் முடிக்க முடியுமோ, முடிச்சிட்டு நாங்க இங்கவே வந்திடுவோம், அப்போ எல்லாரும் அடிக்கடி பார்த்துக்கலாம்”
(ஆதியே சாரதாவையும், ப்ரஜனையும் மன்னித்ததால், சிவநேசனும் மன்னித்துவிட்டார் )கௌசல்யா மகிழ்ச்சியாய், “ரொம்ப சந்தோசம் அண்ணி, நல்ல முடிவெடுத்திருக்கீங்க..”
அப்போது கார்த்திகாவும், அர்ஜுனும் அங்கு தங்கள் பைகளுடன் வர, கீர்த்தி உடனே, “அர்ஜுன் அண்ணா... நீங்களும் இன்னைக்கே கிளம்புறீங்களா? ப்ரஜு மாமாவும் கிளம்புறாங்க.. அண்ணாவும் ஆபீஸ் போறேன்னு சொல்லிட்டு இருந்தாங்க. போங்க, எங்களுக்கு ரொம்ப போர் அடிக்கும்..”
ஷீலா பேசி சென்றபின், குழப்பத்தில் இருந்ததால், அர்ஜுன் எதுவும் கூறாமல் வெறுமனே சிரித்துவைத்தான்.
கார்த்திகா தான், “உங்க அண்ணி இருக்க பயமேன், அவ ஒரு ஆள் போதும், உங்களுக்கு பொழுது போயிடும்.. எப்போ உங்களுக்கு ஸ்கூல் ஓப்பன் ஆகுது”.
YOU ARE READING
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.