வேகமாய் ஓடும் நதியைப்போல், யாருக்கும் நிற்காமல் நாட்கள் நகர, அடுத்த ஒரு வாரம் சென்றதே தெரியவில்லை. அன்று அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் மெயில் அனுப்பியிருந்தார் தேவ்📧📩.
“மே 1, உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அலுவலகத்தில் நடக்கவிருக்கும் போட்டிகளின் பட்டியலும், அதில் பங்குபெற விரும்புவோர்கள் தங்களது பெயரை, இரு தினங்களுக்குள் பதிவு செய்யுமாறு கேட்டிருந்தார்.”
அலுவலகம் மொத்தமும் அதை பற்றியேதான் அன்று முழுதும் பேசி கொண்டனர். நம் மூவர் படையும் அதையே தான் செய்தனர்.
மதியம் உணவு நேரத்தில், அர்ஜுன் ஆதியிடம், "ஹே. மே 1 கொண்டாட்டம் வருதுல, நீ எதுலயும் பார்ட்டிசிபேட் பண்றியா டா ஆதி?" என்றான் சாப்பிட்டபடியே.அவளும் அர்ஜுன் தாய் கமலாவின், கை பக்குவத்தில் செய்த பிரிஞ்சி சாதத்தை, உள்ளே தள்ளியபடி, "ஆமா அஜூ, சிங்கிங்ல சேரலாம்னு இருக்கேன்" என்றாள்.
"என்னது பாட்டு பாட போறியா!! சூப்பர் டா. எங்க கொஞ்சம் பாடி காட்டு. எப்படி இருக்குன்னு பாக்குறேன்." என்றான் ஆர்வமாய்.
YOU ARE READING
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.