மங்கையர்கள் நிறைந்த
மண்ணிலே
ஆளுக்காள் போட்டி
அவர்களுக்கு தான்
இல்லை பாதுகாப்பு வேலி
ஆனால்,,
ஒற்றை மங்கையாய்
விண்ணில் வீற்று
அகிலமெங்கும் விரிந்துள்ளாய்
நீ வானை
அரண்மனையாக்கி..
அரசியே உன்
அரண்மனையில்
மண்ணுலக மங்கையரை
பணியமர்த்தினால்
உன்னை போலவே
இவர்களின் கற்பும்
எந்த கயவர்களும்
தீண்டிட முடியாத தூரத்தில்
இருக்குமல்லவா?
அதனால் தான்,,
"மண்ணுலக மங்கையர்கள்
தேவை" என்ற
உன் பதிலுக்காக
விண்ணோக்கி நான்
உன் தரிசனம் பெற்றவன் தான்..
..NR..