அத்தியாயம் - 33

7.3K 289 44
                                    

அவனை பார்த்தவள் விழிகள் அழகாக விரிந்தன, "மாமா!" அவள் கண்களை அவளே நம்ப முடியாமல் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள். அவள் அவனுக்காக வடிவமைத்து இருந்த உடையை அணிந்து அனைவர் மனதையும் கவரும் மணமதனை போல் அங்கு நின்றிருந்தான் மாறன். அவன் அந்த உடையை அணிந்து கொள்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவன் அது போன்ற உடை அணிந்த போதிலும் இன்று அவன் தோற்றம் அவளுக்கு புதிதாக தெரிந்தது. அவனின் விழிகளும் அவளின் மீது இருக்க, அவன் அருகில் வரவர அவள் இதய துடிப்பு அதிகரிக்க தொடங்கியது.

அவன் அவள் அருகில் வந்து ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்பது போல் அவளை பார்த்தான். அவளோ உலகையே மறந்து அவனை பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.

அவள் தோள்களை பற்றி குலுக்கி அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தான். "என்ன அப்படியே நின்னுட்டு இருக்க, அங்க ஃபங்ஷன்க்கு போக வேண்டாமா?" அவன் அவள் முகம் பார்த்து கேட்க, "ம்ம்! போகலாம் மாமா" அவள் அவனுடன் சேர்ந்து நடந்தாள்.

அவர்களது ஜோடி பொருத்தம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. "வாவ்!! மாயா, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க" சுமி இருவரையும் பார்த்து கண்கள் பளிச்சிட கூறினாள். இருவரும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு தம்பித்தியை வாழ்த்த சென்றனர். அங்கிருந்தவர்களும் மாயா மாறனின் ஜோடி பொருத்தத்தை பற்றி பேச, மாயாவின் முகம் சிவந்தது. அவள் மனம் எல்லையற்ற ஆனந்தத்தில் நிறைந்திருந்தது.

இனிமையான பாடல் இதமான அந்த சூழலை மேலும் அழகாக்க, அங்கிருந்த ஜோடிகள் அனைவரும் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி அவர்கள் உணர்வுகளை பரிமாறிக் கொண்டு இருந்தனர்.

"நாமும் நடனம் ஆடலாமா?" என்று மாறன் விழிகளாலே கேள்வி கேட்க, மாயாவிற்கு அது கனவா நினைவா என்று இருந்தது.

அவள் அவன் முகத்தை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு இருக்கையில், "ஹேய் ஹாண்ட்சம்! ஷேல் வீ டான்ஸ்?" நவநாகரீக உடை அணிந்து உண்மையான முகத்தை மறைக்கும் அளவுக்கு செயற்கை ஒப்பனை செய்து கொண்டு வந்திருந்த ஒரு பெண் மாறனின் கைகளை பற்றி கேட்டுக் கொண்டு இருக்க, "எக்ஸ்க்யூஸ் மீ! அவரு என்னோட கணவர். நீங்க வேற யாராவத தேர்ந்தெடுத்துக்கோங்க" கண்களில் நெருப்பு பொங்க, அந்த பெண்ணின் கைகளை தட்டி விட்டு விட்டு, அவனை அணைத்தவாறு அவன் அருகில் நின்று கொண்டாள் மாயா.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now