அத்தியாயம் - 24

7.6K 292 49
                                    

"இப்பவும் சொல்றேன் அஜய், நீ மீனாவ பத்தினு சொன்னதால தான் நான் இங்க வந்துருக்கேன். அத பத்தி மட்டும் பேசு. மீனாவ பத்தி என்ன சொல்ல வந்த" மாயா அவனுக்கு முகம் கொடுக்காமல் பேச, "என்ன மாயா நா யாரோ ஒரு மூணாவது மனுஷன் மாதிரி பேசுற. நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்திருக்கேன். நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேளு" அவன் பொறுமையாக பதில் அளித்தான்.

"என்ன?" என்பது போல் அவனை பார்த்தாள் மாயா.

"மீனா ஒருத்தன லவ் பண்றா! அது உனக்கு தெரியுமா?" அவன் சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வர, மாயா அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். "இவனுக்கு எப்படி இது தெரிஞ்சது?" என்று மனதுள் எண்ணினாள்.

"பதில் சொல்லு மாயா இது உனக்கு தெரியுமா?" அவன் அவளை மீண்டும் ஒருமுறை கேட்க, "எனக்கு மீனா சம்பந்தப்பட்ட எல்லா விஷயமும் தெரியும். இத தெரிஞ்சுகிட்டு அதை வைச்சு என்ன பயப்படுத்தலாம், மீனாவ பத்தியும் தப்பா பேசலாம்னு நெனச்சிட்டு இருந்தா இதோட இந்த பேச்ச நிறுத்திட்டு இந்த இடத்தை விட்டு கிளம்பிறு. என்னோட தங்கச்சி பத்தி நீ எதுவும் சொல்ல வேண்டாம்" அவள் அவன் முகத்தில் அறைந்தாற்போல் பேச, அவனுக்கு உள்ளூர கோபம் அதிகரித்தது இருப்பினும் அதை கட்டுப்படுத்திக்கொண்டு அவளிடம் மீண்டும் பேச தொடங்கினான்.

"நான் சொல்ல வர்றத முழுசா கேட்காமல் நீயே எதுவும் முடிவு பண்ணிட்டு பேசாத மாயா. அவ காதலிக்கிறானு உனக்கு தெரியும் ஆனா அவ யாரைக் காதலிக்கறா? அந்த பையன் எப்படி பட்டவன்னு உனக்கு தெரியுமா??" அவன் அவள் முகத்தை நேராக பார்த்துக் கேட்டான். மாயா எதுவும் பேசாமல் அவன் முகத்தை கேள்விகளுடன் பார்த்தாள்.

"அவன் பேரு சிவா. ரொம்ப பெரிய பணக்காரன். கேள்வி பட்டு இருப்பயே, சிவா கன்ஸ்டிரக்ஷன்ஸ். அந்த கன்ஸ்டிரக்ஷன்ஸோட ஓனர் தான் இவ காதலிக்கிற சிவா" அவன் சிவாவின் விவரம் சொல்ல, மாயாவின் விழிகள் விரிந்தன.

"சிவா கன்ஸ்டிரக்ஷன்ஸ் எம்.டியா? அவர எப்படி மீனாவுக்கு தெரியும்? அது சரி, இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்?" அவள் மேலும் குழப்பத்துடன் வினவ,

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now