"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."அன்பான வாசகர்களுக்கு,
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..பொங்கும் பொங்கலை போல உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நேசமும் பொங்கி வழிய வாழ்த்துக்கள்.. நண்பர்களே😍
உழவர்களை போற்றி,
உழவு தொழிலை போற்றி,
உழவுக்கு உறுதுணை ஆகும் ஆவினங்களையும் ஆதவனையும் போற்றி,
உதிக்கின்ற திருநாள்களில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும் வளமும் பொங்கிட உங்கள் இனிய சகோதரியின் வாழ்த்துக்கள்..🌾🌾"மாயா! மாயா!" அவன் அவளை எழுப்ப முற்பட்டான், ஆனால் அவளோ ஆழ்ந்தத் தூக்கத்தில் இருந்தாள். "இப்படியே இரவு முழுவதும் தூங்கினா கழுத்து பிடிச்சுக்குமே! இப்போ என்ன செய்யுறது?" என்று எண்ணியவாறு அவள் முகம் பார்த்து நின்றிருந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை எழுப்பவும் மனம் வரவில்லை அவனுக்கு, இருப்பினும் மறுநாள் அவள் உடல் நிலை பாதிக்கப்படும் என்பதை எண்ணி அவளை எழுப்ப முற்பட்டான்.
அவள் தோள்களை குலுக்கி எழுப்பினான். அவளிடம் அசைவேதும் தென்படாததால், இறுதியாக அவளை தூக்கி கட்டிலில் உறங்க வைக்க முடிவெடுத்தான். ஒரு கையால் அவள் தோள்களையும் இன்னொரு கரத்தில் அவள் கால்களையும் பற்றி சிறு குழந்தையை தூக்குவது போல எளிதாக தூக்கி விட்டான். அவளும் சிறு குழந்தை போல் தூங்கிக் கொண்டிருக்க, அவன் மெதுவாக கட்டிலை அடைந்து அவளை கட்டிலில் கிடத்தினான்.
மாயாவிடம் சிறு அசைவு தெரிய, அவன் அசைவற்று நின்றான். "மாட்னோம்! இப்போ கண் விழிச்சு கத்த போறா! இப்போதா எதோ நல்லா பேச ஆரம்பிச்சா, இனி அதுவும் இல்ல" என்று எதேதோ எண்ணிக் கொண்டு அவளை பார்க்க அவளோ தூக்கத்தில் புரண்டு படுத்தாள். அவன் தப்பித்தோம் என்று என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவள் கைகள் அவன் கரத்தை பற்றின, அவன் அதிர்ச்சியுடன் அவள் முகம் பார்த்தான்.
YOU ARE READING
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
Romanceஎதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..