"மாயா!" என்ற சொல்லே அவன் மனதை மயக்குவதை அவனாலும் அன்று நம்ப முடியவில்லை. பெற்றவர்களுக்காக அவளை திருமணம் செய்திருந்த போதும் அவளை மனதார மனைவியாக ஏற்றிருந்தான். அவளுக்கு எந்த குறையும் இன்றி பார்த்துக் கொள்ள நினைத்தான். இன்று வரை அவளை அப்படியே வைத்திருந்தான்.
அவள் மீது அவனுக்கு இருந்த உணர்வு காதல் தான் என்று அவன் உணர சில நாட்கள் ஆனது, ஆனால் அவள் மீது கொண்ட காதலை உணர்ந்ததும் அவன் மனம் எல்லையற்ற சந்தோசத்தை அடைந்திருந்தது.
ஆனால் அவள் மனதிலும் அவ்வாறு ஒரு எண்ணம் வந்த பின்னரே அவன் காதலை சொல்ல நினைத்தான். திருமணம் அவள் விருப்பம் இன்றி நடந்தாலும், அவள் வாழும் வாழ்க்கை அவளுக்கு பிடித்தவாறு இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான்.
திருமணம் செய்து கொண்டதற்காக இல்லாமல், அவனை அவள் மனதார ஏற்று கொண்டாள் மட்டுமே இந்த உறவு தொடரும் என்பதிலும் உறுதியாக இருந்தான்.
இருவரும் பிரிந்து இருந்த நாட்களில், அவளின் அருகாமையை விரும்பினான், அவள் அவன் இல்லத்திற்கு மீண்டும் வந்த பொழுதில் இருந்து அவள் செய்யும் அனைத்தையும் விரும்பினான். இருப்பினும் அவள் மனதின் எண்ணங்கள் என்னவென்று தெரியாமல் சில சமயங்களில் மிகவும் குழம்பி போனான். இன்றும் அவளுக்கு தன் மேல் இருப்பது காதல் தான் என்று அவன் உணர்ந்திருக்கவில்லை.
சுடர் ஒளி போன்ற அவள் முகம் அவன் மனதில் தோன்ற, அதை ரசித்தபடியே உறங்கி விட்டான்.
அதிகாலை சூரியனின் கதிர்கள் வானம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தை பரப்பிக் கொண்டு இருக்க, மாயா மெல்ல கண்களை திறந்தாள். முந்தைய நாளின் நிகழ்வுகள் அவள் மனதை வருத்திய பொழுதும் அதை ஒதுக்கி வைத்து விட்டு, மற்ற வேளைகளில் கவனம் செலுத்த நினைத்தாள்.
அவள் குளித்து முடித்து சமையல் அறைக்குள் நுழைந்த போது வள்ளி அவளை மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். "உனக்காக தான் காத்துட்டு இருந்தேன். வா சாப்பிடு" என்று கூறி அவளுக்கு காலை உணவை பரிமாறினார். சாப்பிட தோன்றாத போதிலும் வள்ளிக்காக அதை அரைமனதோடு அதை சாப்பிட்டாள்.
YOU ARE READING
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
Romanceஎதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
அத்தியாயம் - 31
Start from the beginning