கோவிலில் அனைத்து சடங்குகளையும் முடித்த பிறகு, அவர்கள் வீடு திரும்பினர். வள்ளியின் மேற்பார்வையில் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து உணவு வகைகளும் சுவையாக இருந்தன, எல்லோரும் மதிய உணவை அனுபவித்து சுவைத்து உண்டு மகிழ்ந்தனர்.
திருமணத்திற்கு முன் செய்யும் சடங்குகள் அனைத்தும் மாறனுக்கு செய்யப்பட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க அவன் மனம் அலைபாய்ந்தது, அவன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்திருந்தான். தான் விரும்பிய பெண்ணே தனக்கு வாழ்க்கை துணையாக வரபோவதை எண்ணி அவன் மனம் பூரித்தது.
மீனாட்சி இல்லத்திலும் அனைத்து ஏற்பாடுகளும் தடா புடலாக நடந்துக் கொண்டிருந்தது. அவளுக்கு செய்யும் அனைத்து சடங்குகளையும் அவள் குடும்பத்தினர் மனதார செய்துக் கொண்டிருந்தார்கள்.
மூன்று நாட்கள் மூன்று நோடிகளை போல் வேகமாக ஓட, அனைவரும் எதிர்பார்த்த மாறன் மீனாட்சி திருமண நாள் வந்தது.
அல்லி, மல்லிகை மலர்களின் பூச்சரம் நுழைவாயிலை மிகவும் கவர்ச்சிகரமானதாக காட்டியது. உறவினர்கள் நிறைந்த வீடு இன்னும் அழகாக மாறியது. குழந்தைகளின் சத்தம் மிருத்தங்கம் மற்றும் நாதஸ்வரம் இசையில் ஆதிக்கம் செலுத்தியது. அனைத்து பெண்களும் பாரம்பரிய உடையில் பூமியில் உதித்த தேவதூதர்களைப் போல தோற்றமளித்தனர், சிறுவர்கள்ளும் பாரம்பரிய உடைகளில் மிகவும் அழகாக இருந்தார்கள்.
ஒரே மாதிரியான பச்சை வண்ண பட்டு புடவையில் மாயாவும் மீனாவும் ரதியை போன்ற அழகுடன் வந்து நிற்க, வள்ளி அவர்களை ஆசையாக பார்த்து "என் செல்லங்கள் என் கண்ணே பட்டுரும் போல இருக்கு" என்று கூறி அவர்களுக்கு நெற்றி முறித்தாள்.
பட்டு வேட்டியும் பட்டு சட்டையும் அணிந்து, புன்சிரிப்புடன் மணவறையை அடைந்தான் மாறன். புதிதாக பூத்த ரோஜா இதழ்களால் ஆன மாலையை அவனுக்கு அணிவித்தார் ராஜாராம். அவனுக்கே உண்டான கம்பீரத்துடன் மணவறையில் அமர்ந்தான்.
YOU ARE READING
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
Romanceஎதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
அத்தியாயம் - 10
Start from the beginning