பகுதி -32

869 41 12
                                    

மதுமிதாவிற்கு தனிமை ஏற்படுத்தி கொடுத்த விக்ரம் தனது ராயல் என்ஃபீல்ட் பைக்அருகே சென்றான்.அதை பார்க்கும் போது மதுமிதாவுடன் கழித்த பொழுதுகள் அவன் நினைவை தழுவ சில மாதங்கள் முன்னோக்கி நினைவலையில் பயணப்படதுவங்கினான்.

அன்று  அலுவலகத்தில் அவசர வேலையில் இருந்தவனை கலைத்தது அவன் செல்பேசி அழைப்பு.அதில் மின்னிய பெயரை கவனிக்காதவன் அதை உயிர்பித்து செவிகளில் வைக்க," ஹாய் தனூ.....பிசியா??" என்ற தேன்குரல் அவன் சிந்தனையை சிதற செய்ய
" ஹாய்........,ம்...ஒரு அரை மணிநேரத்தில   திரும்ப கூப்பிடவா??"என்று கூறினான் முகத்தில் சிரிப்புடன்." ம்........"என்ற சொல் மட்டும் அந்தபுறம் இருந்த  கேட்க ," ஏய் வாலு சீக்கிரம் சரினு சொல்லு நான் இப்ப கொஞ்சம் பிசியா இருக்கேன்."

" இருங்க இருங்க தனூ...நான் யோசிட்டு இருக்கேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க."

தனக்கு இருபுறமும் திரும்பி நோக்கியவன் யாரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு," என் அம்முகுட்டிப்ளீஸ்டா....,"என்று கூறிக்கொண்டே ரிசீவரில் ஒரு உம்மா வைக்க ,அடுத்த நொடி ," சரி சரி தனூ...நான் வைக்கிறேன்," என்று அவள் ரிசீவரை வைக்க ஆதியோ வாய்விட்டு சிரித்துக்கொண்டே  தன் வேலை யை தொடர்ந்தான்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now