பகுதி 25

971 56 7
                                    

" ஜீவா......." தன் நண்பன் தன்னை அடித்து விட்டதை நம்பமுடியாமல் பார்த்தான் ஆதி.

" ஆதி நீ என்ன காரியம் பண்ணியிருக்கனு புரியுதா உனக்கு?"

" நீ இவ்ளோ கோபப்படுற அளவு நான் எந்த தப்பும் செய்யலை."

" தப்பு செய்யலையா அப்போ நீ பண்ணி வெச்சிருக்கிறதுக்கு பேரென்ன??"

" ஜீவா கம் ஆன் நீ நினைக்கிற மாதிரி நான் எதையும் ப்ளான் பண்ணியெல்லாம் பண்ணலை. எல்லாமே அந்த அந்த நேரத்தில நடந்த விஷயங்கள் .அதையெல்லாம் ஒன்னு சேர்த்து பெரிய ப்ளான் போட்டு பண்ண மாதிரி ரியாக்ஷன் கொடுக்காத."

" ஆதி நீ சொல்றமாறியே அந்த அந்த நேரத்துல விஷயங்கள் நடந்திருக்கலாம் ஆனா மொத்தமா பார்க்கும்போது கண்டிப்பா நீ முன்னாடியே எல்லாமே யோசிச்சு பண்ண மாதிரித்தான் இருக்கும்."

" நீ என்னோட உயிர் நண்பன் உன்னாலயே என்னை புரிஞ்சுக்க முடியலையா?"

" ம்ம் அதான் நானும் சொல்ல வரேன் நான் உன் உயிர் நண்பன் எனக்கே தப்பா தான் தோணுது அப்ப மத்தவங்க எப்படி புரிஞ்சுக்குவாங்க சொல்லு??"

" ம்....."

" சரி உன் பேரை ஏன் மாத்தி விக்ரம்னு கொடுத்த?"

" ஹே....சத்தியமா அது மது வோட பாட்டி கம்பெனினு எனக்கு தெரியாது. நான் கொஞ்ச நாள் யாருக்கும் தெரியாம  இருக்கனும்னு நினைச்சுதான் சென்னையை விட்டே போனேன்.அப்பதான் பெங்களூர் ல ஒரு நல்ல கம்பெனியில ஆஃபர் வந்துச்சு நான் இண்டர்வியூ அட்டென்ட் பண்ணும்போது அவங்க என் பேரோட முதல் பாதிய கூப்பிட்டாங்க. நீங்க எல்லாரும் விக்ரமாதித்தன் அப்படீங்கிற என்னோட பேர்ல இருக்கிற கடைசி ஆதித்யன்னு கூப்பிடறமாதிரி அவங்க என் பேரோட.முதல் பாதி விக்ரம்னு கூப்பிட்டாங்க.நான் என்ன ஸ்கூல் படிக்கிற பையனா மிஸ் மிஸ் என்னை எல்லாரும்  ஆதி னு தான் கூப்பிடுவாங்க நீங்களும் அப்படியே கூப்பிடுங்கனு சொல்றதுக்கு.அதனால அதை நான் பெருசா எடுத்துக்கலை.அனட் மதுக்குதான் பழசு எதுவுமே ஞாபகம் இல்லையே அப்பறம் நான் எதுக்கு பேரை மாத்தனும் லாஜிக்கா யோசி.ஜீவா."

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now