பகுதி -45

393 11 14
                                    

குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவு அமைதி நிலவியது அந்த வரவேற்பறையில். அந்த நிசப்தத்தை கலைத்தது மதுவின் தந்தையின் குரல்,"ஆனந்த் இப்ப உனக்கு உன்னோட தப்பு புரியுதா?"

"இதுல என்னோட தப்பு என்ன இருக்கு மாமா. எனக்கு மதுவோட நிலை தெரியாது அதனால தான் உரிமையில நான் அப்படி அவளை கூப்பிட்டேன்.மது எனக்கு விஷயத்தை அங்கேயே சொல்லிருக்கலாமே."

"ஆனந்த் ஒரு பொண்ணு ஏற்கனவே நல்லா தெரிஞ்ச ஒருத்தரை தெரியலை னு சொல்றாங்க னா அதுக்கு சில காரணங்கள் இருக்கலாம்.முதல்ல அதை புரிஞ்சுக்க."

"சரி மாமா நான் கிளம்புறேன்."என்று கூறி கோபத்துடன் வெளியேறினான்.

"என்னங்க ஆனந்த் கோபமா போறான்,"மதுவின் தாயுடைய  வருத்தமான குரலை கேட்டவர் ஒரு பெருமூச்சுடன்,"என்னமா செய்யுறது. அவன் புரிஞ்சுக்க மாட்டான்.இப்ப நேரா எங்க அம்மாகிட்ட போய் நின்னு அவங்களையும் கூட்டிட்டு வருவான் பாரு.அடுத்து என்ன பிரச்சினை காத்திருக்கோ?"என்று புலம்பியவாறே எழுந்து தன் அறை நோக்கி சென்றார்.

வரவேற்பறையில் நடந்த சம்பவம் அனைத்தையும் மாடியின் வளைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மது அமைதியாக தனது அறையில் புகுந்து மெத்தையில் விழுந்தாள்.மனதில் தனக்கு உதவிய  அந்த பெயர் தெரியாத நபரை குறித்த எண்ணங்கள் மேலோங்கி இருந்தது.
அவரை இதற்கு முன் எங்கோ பார்த்த நினைவு இருந்ததே தவிர எங்கே என்று நினைவு வரவில்லை.அவரை குறித்து தந்தையிடம் கூறலாமா வேண்டாமா என சிறு பட்டிமன்றம் அவளுக்குள்ளே நடக்க இறுதியில் வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டது அவள் அறியாமல் அவன் மேல் சாய்ந்த அவளது மனம்.கலைப்பு மிகுதியாலும் அதிகமாக யோசித்ததாலும் மது அப்படியே உறங்கிப்போனாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மதுவின் தலையை மென்மையாக ஒரு கரம் வருட அதன் இதத்தில் அவளது உதடுகள் தானாக மென்னகை கொண்டது.சிரிக்கும் அவள் உதட்டை வருடிய விரல்கள் பின் மீண்டும் கலைந்த அவள் சிகையை சரி செய்து காதோரம் அவளது முடியை ஒதுக்கி விட்டது.நெற்றியின் புருவத்திற்கு இடையில் ஏற்ப்பட்ட முடிச்சை விரலால் வருட அவள் முகம் மலர்ந்தது. அவளுக்கு வலிக்குமோ என்ற பயத்துடன் மிகவும் மென்மையாக அவளது நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்த அந்த உருவம் பின் அவளது இடையில் தன் கைகளை நுழைத்து அவளுக்கருகில் மிகவும் நெருக்கமாக அவளை அனைத்தவாறு படுத்துக் கொண்டான்.சிறிது நொடிகளில் தன்னை நோக்கி திரும்பி படுத்தவளை தன் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு தன் கைவளை வில் அவளை பாதுகாத்துக்கொண்டு உறங்கிப்போனான் அவன்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Kde žijí příběhy. Začni objevovat