பகுதி-42

636 21 5
                                    


நண்பன் தன்னிடம் ஏதோ கூற வருவதை புரிந்து கொண்ட ஆதி,"என்ன மச்சான் எங்கிட்ட உனக்கு என்ன தயக்கம்?"என்று வினவ அதற்கு ஒரு பெருமூச்சு விட்டவன் ,"இல்லை ஆதி நான் உடனே டெஹ்ராடுன் (Dehradun) கிளம்பி போகனும்,"என்று கூற ஆதியோ,"ஓ....ஆம  ல நீ ட்ரெயினிங் ஒரு வருஷம் போகனும் ல, ஆனால் அதுக்கு ஏன் தயங்குற?"என்றான் புரியாமல்.

"இல்லை ஆதி நான் இன்னும் நம்ம அபூ வோட ஆக்ஸிடென்ட் பத்தி கண்டு பிடிக்கல.இப்ப நான் ட்ரெயினிங் போனா ஒரு வருஷம் கழிச்சு தான் திரும்ப வர முடியும். இப்பவே எவிடென்ஸ் எல்லாம் அழிச்சிட்டாங்களோ னு கவலை யா இருக்கு.இதில இன்னும் ஒரு வருஷம் அப்பறமா  என்ன நடக்கும்னே சொல்ல முடியாது.அதான் கொஞ்சம் கவலையாவும் கொஞ்சம் குற்ற உணர்ச்சியாவும் இருக்கு‌."என்று கூறினான். தன் நண்பனை பார்த்து புன்னகைத்த ஆதி ," மச்சான் இதில் நீ ஃபீல் பண்ண ஒன்னும் இல்லை டா.நம்ம என்ன தான் கஷ்டப்பட்டாலும் மறைக்கப்பட்ட விஷயம் எப்ப தெரியனுமோ அப்ப தான் தெரியும். உண்மைய ரொம்ப நாள் மறைச்சு வைக்கவும் முடியாது.ஒரு நாள் கண்டிப்பா வெளிய வரும்.இப்ப நீ எதை பத்தியும் கவலை படாம சந்தோஷமா உன் லட்சியத்தை நோக்கி போ." என்று கூற அப்பொழும் சமாதானம் ஆகாத ஜீவா ,"உனக்கு ஒன்னும்....."அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்பே அவனை தடுத்த ஆதி ,"நீ அடி தான் டா வாங்க போற."என்று கூற ஜீவா முகத்தில் குழப்பம் நீங்கி புன்னகை மலர்ந்தது.

"அப்பறம் நிலா எப்படி இருக்கா?"

"ம்.... மேடம் சூப்பரா இருக்காங்க."

"இப்ப எங்க நர்ஸரிலயா?எப்ப வருவா ? நான் பார்கனுமே,"

"ஈவினிங் கூட்டிட்டு வருவேன். நீ எப்ப கிளம்பனும்?"

"உன்னை பார்க்க தான் வந்தேன் . அடுத்த திங்கள் டெங்ராடுன் ல இருக்கனும். இப்பவே கோயம்புத்தூர் கிளம்பனும் மச்சி கொஞ்சம் வேலை இருக்கு.முடிஞ்சா நிலா வ பார்கலாம் னு நெனச்சேன் . பரவாயில்லை அப்ப நான் கிளம்பறேன்." என்று கூற ஆதியோ ,"இன்னைக்கு இருந்துட்டு போலாம் ல ஜீவா."

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now