தந்தை மகளிற்கு நடுவே நடந்த அந்த சுவாரசியமான விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த மதுவின் நினைவுகள் அவளது பெற்றோரை எண்ணி துயர்கொண்டது ,.தன்னுடைய இச்செயல் அவர்களுக்கு எவ்வளவு பெரிய மனவருத்தத்தையும் தலை குனிவையும் ஏற்படுத்தும் என்பதை நினைத்தவள் கண்கள் மெல்ல கலங்கயது.
கலங்கிய கண்களையும் வருந்திய மனதையும் சமநிலைக்கு கொண்டுவர அவள் நிலாவை தேடி வரவேற்பறைக்கு வந்தாள்.
அங்கே தந்தையின் மடியில் அமர்ந்து அவனது கண்ணத்தை பிடித்து ஆட்டிக்கொண்டு சந்தோஷமாக சிரித்துக்கொண்டிருந்த நிலாவை பார்த்தவள் மனதில் இந்த குடும்பத்தில் தான் இணைய வேண்டும் என்ற உறுதியான எண்ணம் தோன்றியது.
அழகான புன்னகையால் நிலா முன் சென்றவள் ," பேபி... நீ ஸ்கூல் விட்டு வந்து டிரெஸ் கூட மாத்தலடா வா அம்மா உனக்கு டிரெஸ் மாத்தி விடறேன்," என்று அவளை கூட்டிக்கொண்டு படுக்கையறை நோக்கி சென்றாள்.
செல்லும் அவளையே தொடர்ந்த ஆதியின் கண்களில் அதுவரை இருந்த கனிவு மறைந்து ஒரு வித கனல் குடிகொண்டது," அவ்ளோ சீக்கிரம் உன்னை விட்றமாட்டேன் ," என்று மனதில் உறுதி எடுத்தவன் அடுத்த அறைக்குள் தன்னை புகுத்தி கொண்டான்.காலையிலிருந்தே அமைதியற்ற மனநிலையில் இருந்தவனிற்கு சிறு அமைதியும் தனிமையும் தேவைப்பட கண்களை மூடி தியானம் செய்ய தொடங்கினான்.
மதுவின் சொல்பேச்சு கேட்டு சமத்தாக வேறு உடையில் வந்த.நிலா தன் தந்தையை காணாமல் தேடி பின் தாயிடம் வந்தாள்," அம்மா அப்பாவை காணோம் எனக்கு பசிக்குது...," என்று சின்ன சினுங்கலுடன் கூறியவள் தாயை கட்டி அணைத்தாள்.
" நிலா செல்லம்....அப்பா அந்த ரூம்ல இருப்பாங்க போய் அப்பாகிட்ட இருங்க அம்மா சாப்பாடு எடுத்து வைச்சுட்டு கூப்பிடறேன்," என்று கூறியவளை மறுத்த குட்டிப்பெண் ," முடியாது நான் உங்ககூடவே நின்னுகிறேன்," என்று கூறினாள்.
அவளை வாரி.அணைத்த மது வேகமாக சாப்பாட்டை.மேஜை மீது பரப்பிவிட்டு மகளிடம் திரும்பி," செல்லகுட்டி போய் அப்பாவை சாப்பிட கூட்டிட்டு வாங்க ," என்று அன்பு கட்டளையிட அதை மறுத்த சிறியவளோ ," நிலா குட்டிக்கு பயங்கரமா பசிக்குது ஒரு அடி கூட நடக்க முடியாது பாப்பா பாவம்," என்று உதடு பிதுக்கி கூற அதன் அழகில் மயங்கியவள் சிறு கலக்கத்துடன் அவனது அறையை நோக்கி எட்டு வைத்தாள்.
YOU ARE READING
😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)
Non-Fiction#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.