மருத்துவமனை

2.3K 95 33
                                    

மருத்துவரை பின்தொடர்ந்து மனதில் சொல்லொன்னா துயரத்துடன் மதுமிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை நோக்கி சென்றனர் அந்த பெற்றோர்கள் மதுவின் அறை வாசலில் வெள்ளை சீறுடை அணிந்த ஒருவன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து மனதில் மருத்துவரின் அக்கறையை எண்ணி சிறு ஆறுதல் கொண்டனர்.

" என்ன காளி யாரும் உள்ள போக அனுமதி கேட்டாங்களா??"

" அது...... இல்.... லை...ங்க... ஐயா யா...ரும் உள்..ளே... போகலை , எப்..படி இந்த காளியை தாண்டி..... யாரும் போயிடமுடியுமா..என்ன??"என்று கூறினான்.அவன் கண்களில் இருந்த கள்ளத்தனத்தையும் வார்த்தைகளிலிருந்த தடுமாற்றத்தையும் கண்டுகொள்ள அவர் காவல்அதிகாரி அல்லவே ஆகையால் அவனை கடந்து உள்ளே நுழைந்தார்.

அவரது பின்னே வந்த மதுவின் அன்னை தன் மகளை நெருங்கி அவள் தலையை கோதியவர் கைகள் நடுங்கியது அதே நடுக்கத்துடன் தன் கணவரை பார்க்க அவரோ மதுமிதாவின் பரிசோதனை பதிவை பார்த்துக்கொண்டிருந்த மருத்துவரின் அருகே கவலையுடன் நின்றுகொண்டிருந்தார்.

" என்னங்க....இங்க கொஞ்சம் வாங்களே..." குரல் நடுங்க அழைத்தார்.

" என்னாச்சுமா??"அவர் கேள்விக்கு பதில் கூறாமல் மதுவை நோக்கினார். தன் மனைவியின் கண்கள் போன திசையில் பார்த்த அவர் அதிர்ந்தார்.

இவர்கள் இருவரின் சம்பாஷனைகளையும் கேளாமல் கேட்டுக்கொண்டிருநாத மருத்துவரோ,"என்னாச்சு??எதாவது பிரச்சனையா??"

" டாக்டர் மதுவோட கழுத்தில தாலி இருக்கு," அதற்கு மேல் கூற முடியாமல் மதுவின் தாய் கண்ணீர் வடிக்க தொடங்கினார்.

" என்ன சொல்றீங்க? இது எப்படி சாத்தியம்??" அதிர்ச்சியுடன் அவர் மதுவை நோக்க அங்கே அவளோ அழகு தேவதையென கண்கள் மூடி கழுத்தில் தங்கத்தாலான புதிய தாலி மின்ன முகத்தில் புன்சிரிப்புடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

அப்பொழுது உள்ளே நுழைந்த செவிலியரை பார்த்தவர்," சிஸ்டர்...இவ்வளவு நேரம் நீங்க இங்க இல்லையா??"

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now