விரக்தி

2K 104 42
                                    

தன் நண்பனிடம் கோபமாக பேசிய ஆதி விறுவிறுவென்று வீட்டினுள்ளே நுழைந்தான் அங்கே உணவு மேஜையில் சமைத்த உணவு திறக்கப்படாமல் இருப்பதை பார்தவனின் மனம் மீண்டும் அன்று மதியம் தான் மதியிடம் நடந்து கொண்ட விதத்தை நினைத்து வருந்தியது அவள் ஆசையாக சமைத்த உணவு பதார்த்தங்களை பார்தவனின் மனம் தன் மீதே வெறுப்பு கொள்ள வேகமாக வாசலுக்கு விரைந்தான்.

" பரமு அண்ணா...."

" சொல்லுங்க தம்பி....ஏன் இவ்வளவு பதட்டமா வறீங்க??"

"அதெல்லாம் ஒன்னுமில்லை மதியம் சமைச்ச சாப்பாடெல்லாம் அப்படியே இருக்கு நீங்க  உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு மிச்சத்தை யாருக்காவது கொடுத்திடுங்க...,"என்று கூறி அவரிடம் பாத்திரத்தை ஒப்படைத்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்.

நடந்தவற்றை ஒரு ஓரமாக நின்று பார்த்த ஜீவா மனதில்," மது சமைச்ச சாப்பாட்ட கூட வீணாக்க நினைக்காத நீ மது வாழ்கையை வீணாக்குற மாதிரி காரியம் செய்வியா??" என சிரித்துக்கொண்டு நண்பனை பின்தொடர்ந்து சென்றான்.

" ஆதி....அடுத்து என்ன பண்ண போற?" என வினவியபடி உள்ளே நுழைந்தவன் ஆதி தனது உடைமைகளை அடுக்குவது கண்டு திகைப்படைந்தான்.

" அடுத்து என்ன?? ஒன்னுமில்லை நிலா அவங்க பாட்டிவீட்டில கொஞ்சநாள் பத்திரமா இருக்கட்டும் அங்களுக்கும் அவ கூட இருக்க முடியலைனு ரொம்ப ஆதங்கம்."

" சரி நிலா பாட்டிவீட்டில விட்டுட்டு நீ என்ன பண்ண போற?"

" நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்," என்று அடுத்த வெடியை போட்டான்.

" எப்படா? என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும் னு தோணலையா உனக்கு?"

" நான் நேத்தே ரிசைன் பண்ணிட்டேன் .நான் வேற ஒரு காரணத்துக்காக ரிசைன் பண்ணேன், இப்ப வாழ்க்கை என்ன வேற மாதிரி கொண்டு போகிடுச்சு,"என்று பெருமூச்சு விட்டவன்," வேற என்ன கேட்கனும், அதையும் கேட்டிரு ஏன் தயங்குற?"

" வேலையை விட்டுட்டு என்ன பண்ண போற? இப்ப எதுக்கு உன் திங்கஸெல்லாம் பேக் பண்ணிட்டு இருக்க??"

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now