கால்கள் அவர் அருகே செல்ல அவரோ," நல்லா இருக்கீங்களா??? தம்பி நீங்க பாட்டி வீட்ல இருக்கீங்கனு சொன்னாரு இப்ப உடம்பு எப்படி இருக்கு?"என்று அவர் வினவ மதுமிதா வின் மனமோ ," மீண்டும் ஆதித்யனா????" என்று உறைந்தது.
"-ஆ.....நல்லா இருக்கு சார்."
" அட எப்பவும் போல அண்ணேணே கூப்பிடுங்க மதுமா."என்று கூறியவர் பின் நினைவு வந்தவராக ," நான் ஒருத்தன் உங்களை வெளியவே நிக்க வைக்கிறேன், உள்ள வாங்க மா ," என்று வற்புறுத்த ," இல்லை இல்லை நான் இப்ப அவசரமா போகனும்," என்று கூறியவள் அவ்விடம் விட்டு வேகமாக நடந்தாள் இல்லை.இல்லை கிட்டதட்ட ஓடினாள் என்றே கூறலாம்.மூச்சிறைக்க ஒஓரடி தூரமே ஓடியிருந்தவள் முன்பாக வேகமாக வந்த ஒரு வாகனம் சடன் ப்ரேக் போட்டு நிறுத்த திடுக்கிட்டு திரும்பியவள் அங்கே விக்ரமை பார்த்ததும் சிறு ஆசுவாசமடைந்தாள்.
"மது ஏன் ஓடி வர என்னாச்சு?"
" ஒ...ஒ...ஒன்னுமில்லை ஒரு செக்யூரிட்டி என்னை ஃபாலோ பண்ற மாதிரி இருந்துச்சு அதான்."
" யாரும் வரலையேமா," அவள் பின்னால் பாரத்தவாறு கூறினான் ஆதி.
" ம்...இப்ப காணோம் ஆனால் என்னை கூப்பிட்டு பேசுனாரு."
" உன்னை வேறு யாரோனு நினைச்சிருக்கலாம் டேக் இட்.ஈஸி."
" ம்.... ஆமா நீங்க எங்க இங்க ? என்னை ஃபாலோ பண்றீங்களா??"
" பார்ரா.....இது என்ன புது பழி?"
" ஆமா எப்போலாம் நான் ஆபத்துல இருக்கேனோ அங்கலாம் நீங்க கரெக்டா வந்திடறீங்களே?"
" ம்...பக்கத்தில என் ஃப்ரெண்ட பார்க்க வந்தேன்.....அப்படியே பக்கத்தில இருக்கிற பீச்சில கொஞ்ச நேரம் உட்காரனும்னு தோனுச்சு " என்றவனை இடைமறித்தவள் ," பீச்சா இங்கயா??"
" ம்....உனக்கு தெரியாதா இது சென்னை இ.சி.ஆர். தமிழ் ல கிழக்கு கடற்கரை சாலைனு சொல்லுவாங்க."
" ஓ.....எனக்கு தெரியலை விக்ரம் சென்னை பத்தி ரொம்பலாம் தெரியாது."
YOU ARE READING
😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)
Non-Fiction#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.