பாசம்

1.2K 59 24
                                    

கண்களை மூடி பழைய நினைவில் ஆழ்ந்திருந்த ஆதியை பார்த்த ஜீவாவின் மனம் வலித்தது. நெற்றியின் சுருக்கங்கள் அவன் உறங்காமல் தீவிர சிந்தனையில் இருக்கிறான் என்பதை உணர்த்த அவன் சிந்தனை நிச்சயமாக அபூர்வாவை சுற்றி தான் இருக்கும் என்பதை புரிந்துகொண்டவன் முகம் ஒரு வறன்ட புன்னகை சிந்தியது.

அபூர்வா ஆதித்யின் அன்பு தங்கை.ஆதியும் ஜீவாவும் பள்ளி பருவத்தை ஒன்றாகவே முடிக்க அவர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.அன்றிலிருந்து இன்றுவரை இணைபிரியா நண்பர்களாக இருந்தபோதிலும் ஜீவாவிற்கு தெரியாதவை ஆதியின் வாழ்வில் நடந்திருக்கிறது என்பதை உணரும்போது ஜீவாவின் மனம் வலிக்கவே செய்தது.

மனம் தன் போக்கில் யோசிக்க கைகள் வாகனத்தை சென்னையை அடைய செய்தது.

" ஆதி...எந்திரி...." என்று கூறியபடியே வண்டியை பார்க்க செய்தான் ஜீவா.கண்களை திறந்து பார்த்த ஆதிக்கு தான் இருக்கும் இடம் சூழல் எல்லாம் புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது.கண்களை கசக்கிக்கொண்டு வெளியே வந்தவன் கார் நிற்கும் இடத்தை பார்த்து அதிர்ந்தான்.

" டேய் என்னை ஏன்டா ஹாஸ்பிடல் கூண்டிட்டு வந்திருக்க நான் முதல்ல நிலாவை பார்கனும்."

" என் கூட அமைதியா வா."என்றபடி ஜீவா முன்னே நடக்க ஆயிரம் குழப்பங்களுடன் ஆதி அவனை பின் தொடர்நதான்.மருத்துவமனையினுள் நுழைந்த ஜீவா நேராக மூன்றாவது தளத்திருந்த ஒரு அறைக்குள் நுழைய ஆதியும் அவனை பின்தொடந்தான்.அறையினுள் கட்டிலில் வாடிய மலரைபோல் கண்கள் மூடி இருந்த நிலாவை பார்த்தவன்," நிலா......." என்ற கேவலுடன் அவள் அருகே சென்று அவளது மேனியை தன் கைகளால் தடவ துவங்கினான்.

" நிலா...நிலா...கண்ண திறந்து பாருமா அப்பா வந்திருக்கேன் மா..நிலா..." என்று புலம்ப அந்த நேரம் உள்ளே வந்த ஒரு செவிலியர்," சார் குழந்தைக்கு தூக்க மருந்து கொடுத்திருக்கோம் நைட் எல்லாம் அழுது பொலப்பிட்டே இருந்தா டிஸ்டர்ப் பண்ணாம வெளிய வெயிட் பண்ணுங்க."

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)حيث تعيش القصص. اكتشف الآن