ஆதியின் அன்னை துளசி சோர்வுடன் அந்த கட்டிலில் படுத்திருக்க அவருக்கு அருகே அவர் கணவர் ராஜரத்தினம் கையில் தன் பேத்தி நிலாவுடன் அமர்ந்திருந்தார்.நிலா தன் தாத்தாவின் தோள்களில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு தன் பாட்டியை பார்த்துக்கொண்டிருந்தாள்.மெதுவாக கண்களை திறக்கமுடியாமல் திறந்த துளசி தன் பேத்தியை பார்த்ததும் கண்கள் விரிய முகம் மலர சிரித்தார்.
"பா...த்தி.....பாத்தி...."தன் பிஞ்சு கைகளால் ராஜரத்தினத்தின் கண்ணத்தை தொட்டு தன் பாட்டி பக்கம் திருப்பினாள் நிலா.
"எழுந்துட்டியாமா இரு உனக்கு எதாவது குடிக்க தர்றேன் என்றவாறு தன் பேத்தியை அருகே இருந்த ப்ராம் இல் (pram) அமரவைத்துவிட்டு தன் மனைவியின் காலை கடன்களை முடிக்க உதவி செய்தார்.பின் அவருக்கு குடிக்க மிதமான பால் ஐ கொடுத்தவர் தன் பேத்தியை மீண்டும் தூக்கி தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு தன் மனைவியுடன் பேசலானார்.
அறை வாசலில் நின்றிருந்த ஆதி இக்காட்சியை கண்ணகளில் நீருடன் பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் மனம் ஒரு வாரம் முன்பு பயணித்தது.
நிலாவுடன் கோயமுத்தூர் வந்திறங்கிய ஆதி நேரே தன் தந்தை கூறிய மருத்துவமனை சென்றான்.தன் தாயின் பெயரை கூறி அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றவன் கண்டது கண்களில் சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்திருந்த தன் தந்தையை.அதுவரை கம்பீரமாய் பார்த்த தன் தந்தையை அந்த நிலையில் கண்டவன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து அவரிடம் விரைந்தான்.
"அப்பா....."ஆதியின் குரல் காதில் கேட்டதும் புது இரத்தம் நரம்புகளில் பாய்வது போல் உணர்ந்த அந்த பெரியவர்,'வந்துட்டியா ஆதி..."அவரது குரலில் தான் எத்தனை நிம்மதி.அவரது நிலையை நொடிக்குள் உணர்ந்து கொண்டவன்,"அப்பா டாக்டர் என்ன சொன்னாரு?"
"இன்னும் எதுவும் சொல்லலை பா செக் பண்ணிட்டு இருக்காரு அவருக்காக நான் வெயிட் பண்றேன்."
YOU ARE READING
😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)
Non-Fiction#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.