பகுதி 39

758 28 9
                                    

அபூர்வாவும் புகழும் இறந்த செய்தி கேட்டவுடன் அதன் அதிர்வை தாங்காத முடியாத புகழின் தாயார் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே சரிந்து விட்டார்.

ஒரே நேரத்தில் மூன்று மரணங்களை சந்திந்த அந்த இல்லம் மயான அமைதியில் மூழ்கியிருந்தது.துக்கம் தொண்டையை அடைத்த போதும் ஆதி வாய்விட்டு கதறவில்லை. தாய்க்கு தலைமகனாய் குடும்பத்தின் தூணாய் தாய் தந்தையரை சமாதானம் செய்தான்.ஊரிலிருந்து தூரத்து சொந்தத்தில் ஒரு பாட்டியை வரவழைத்து சமையல் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தான். நிலாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான்.

இரண்டு மாதங்கள் இரண்டு யுகங்களாக கடந்திருந்த வேளையிலும் அந்த குடும்பத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கவில்லை .

நிலாவின் தேவைகள் அனைத்தையும் ஆதித்யாவே பார்த்து விடுவான் வேறு ஒருவ அவளை அருகில் இருந்த விடமாட்டான்

நிலா பிறந்து இரண்டு மாதங்கள் கழிந்து இருந்த நிலையில் ஒரு நாள் காலை வேளையில் ஜீவா  "ஆதி....ஆதி....." அலறிய வண்ணம் ஆதியின் வீட்டினுள் நுழைந்தான்.

"நிலா தூங்குறாள்,"
என்று கூறியவன் உணர்ச்சியை துடைத்து முகத்துடன் ஜீவாவை நோக்கி "என்ன விஷயம்?" என்று கேட்டான்.

" நீ வேலைக்கு போகப் போறியா?"

" இதென்ன கேள்வி? கண்டிப்பா."

" சென்னைக்கு வேலைக்கு போகப் போறியா?"

"ஆமா ."

" அப்பா, அம்மா,நிலா  இவங்கள தனியா விட்டுட்டு எப்படி போவ"

"நிலாவை  இங்க விட்டுட்டு போறேன் நான் இப்போ உன்கிட்ட சொன்னேன்?"

" அப்புறம் ?"

"நானும் நிலவும் அடுத்த மாசம் சென்னைக்கு கிளம்பறோம். "

" நிலா உன் கூட உன் கைய புடிச்சிட்டு வருவாளா? அவள்  கழுத்து நிற்காத குழந்தை அவளை எப்படி உன்னால சமாளிக்க முடியும்? "

ஜீவாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்த ஆதி அவன்  கையை பிடித்து வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தான். வீட்டின் வெளியே முன்புறம் ஒரு சிறிய பூந்தோட்டம் அமைந்திருந்தது அதில் வண்ண வண்ண பூக்கள் அழகாக பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன அவை யாவையும் அபூர்வாவின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்த அழகிய மலர்கள் .அந்தப் பூக்கள் ஒவ்வொரு முறை அவனை பார்த்த தலையசைக்கும் பொழுதும் அபூர்வா தன்னை நோக்கிச் சிரிப்பது  போன்ற உணர்வை ஏற்படுத்தும். என்றும் போல அன்றும்  அந்த  உணர்வு கொடுக்க அபூர்வாவின் பிரிவை ஏற்க முடியாத அவன் நெஞ்சம் கலங்கியது.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now