பகுதி -43

179 9 3
                                    

வழக்கம்போல நிலாவை நர்ஸரியில் விட்டுவிட்டு  தன் அலுவலகம் நோக்கி சென்ற ஆதியை சிரித்த முகத்துடன் வரவேற்றார் அவனின் எம்.டி சதாசிவம்.
அறுபதுகளை தொட்ட அவரது வயதை ஐம்பதிற்கு குறைக்க தன் நரைமுடிகளை கருப்பாக்க முயற்சித்து அதில் அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.
"குட் மார்னிங் சார். வாட் எ ப்ளசென்ட் சர்ப்ரைஸ்."(Good morning sir. What a pleasant surprise)

"ம்...குட் மார்னிங் ஆதி ஹவ் ஆர் யூ?"(How are you )

"ஃபைன் சார்.எனிதிங் இம்பார்டன்ட்?(Fine sir . Anything important?)

"ஆமா ஆதி ஒரு சின்ன பிரச்சினை.""

"சொல்லுங்க சார்."

"நம்மளோட இம்பார்டென்ட் க்ளையன்ட் இன்னைக்கு மார்னிங் யு.எஸ் ல இருந்து வந்திருக்காங்க.ஒரிஜினல் ப்ளான் படி அவங்களை நம்ம சதீஷ் சயிட் சீயிங் கூட்டிட்டு போகுறதா இருந்துச்சு.பட்."

"ஏன் சார் சதீஷ் லீவ் ல போயிருக்காரா?"

" நோ நோ அவர் இங்க தான் இருக்கார் ஆனால் அவங்க பார்க்கப்போகும் இடமெல்லாம் பழங்கால கட்டிடங்கள் அதனால் அவங்க  கூட ஒரு ஆர்கிடெக்ட் வரனும் னு அவங்க விரும்புறாங்க."

இப்போது ஆதிக்கு தெளிவாக விளங்கியது .தன்னை அவர்களுடன் துணைக்கு போகுமாறு எம்.டி விரும்புகிறார் என்று.ஆனால் பெரிய பதவியில் இருக்கும் தன்னிடம் இதை கேட்க தயங்கியே சுற்றி வளைக்கிறார் .ஒரு நிமிட அமைதிக்கு பின்,"சரி சார் நோ ப்ராப்ளம்.அவங்க வரும் போது எனக்கு இன்ஃபார்ம் பண்ண சொல்லுங்க இப்ப எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ."என்று கூறியவன் அவ்விடம் விட்டு விருவிருவென்று என்று சென்றான்.

அவன் சென்ற விதமே கூறியது அவனது கோபத்தை.

"என்ன சார் .ஆதி சார்க்கு இவ்வளவு கோபம் வருது."என்று‌கேட்ட மேனேஜரிடம்,"கோபம் வரதான் செய்யும் . அவரோடது பெரிய போஸ்டிங்.அவரை போய் கைட் (guide) வேலை பார்க்க சொன்னா? நமக்கு வேற வழி இல்லை.இந்த க்ளையன்ட் ரொம்ப முக்கியம்."

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now