ஜீவாவிடம் பேசிய ஆதித்யன் குழப்பத்துடனே வீட்டை அடைந்தான்.
" வா...ஆதி ஏன் இவ்வளவு நேரம்? உன்னை காணாம நிலா ஒரே அடம்."
" ஐயோ....மறந்துட்டேன் மாஜீவாகிட்ட பேசிகிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலை.எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாம் இல்லையா மா ? இப்ப நிலா எங்க?"
" உனக்கு கால் பண்ணேன் ஆனால் உன் செல் வீட்டிலயே வைச்சிட்டு போயிட்ட.அவளோட அழுகையை சமாளிக்க முடியாம இப்ப தான் அப்பா பக்கத்து கடைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க."
" ம்....."
" சரி நீ என்ன முடிவுல இருக்க??"
"எதைப்பத்தி கேட்கறீங்க??"டவலை வைத்து முகம் துடைத்தவாறே ஒரு கண் வாசல் புறம் இருக்க தன் அன்னையை கேட்டான் ஆதி.
அலைபாயும் அவன் கண்ணில் இருந்தே அவனது தேடலை புரிந்து கொண்டவர்," நிலாவை திரும்ப இங்கயே விட்டுட்டு போகபோறியா??"
அவர் கேள்விக்கு பதில் கூறி ஆதி எத்தனிக்க," இல்லை........நான் அப்பாகூடதான் இருப்பேன்," என்றவாறு வாசலில் இருந்து மூச்சு வாங்க ஓடி வந்து தன் தந்தையை அணைத்துக்கொண்டாள் நிலா.
" யாரு சொன்னா நான் நிலாவை விட்டுட்டு போகறேன்னு ?நம்ம எல்லாருமேதான் போக போறோம்."
" ஐயா......ஜாலி ஜாலி எல்லாருமேவாபா??"
" ஆமாடா எல்லாருமேதான் பாட்டி , தாத்தா, நிலா, நான் எல்லாரும் தான் போறோம்."
" ஆதி....நிலாவை அம்மாகிட்ட விட்டுட்டு வா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்," பெங்களுரிலிருந்து வந்ததிலிருந்து ஆதியிடம் ஒரு வார்த்தையும் பேசாத அவன் தந்தை ஆதியை அழைக்க ஆனந்தமாக அவருடன் சென்றான்.
ஆதியின் பெற்றோர் குடியிருந்த சென்னை வீடு பிரம்மாண்டமானதாய் இல்லாவிடினும் அதுவும் பெரிய வீடாகவே இருந்தது.அதன் இருபுறமும் சிறிய தோட்டம் அந்த வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்க அந்த தோட்டத்தில் நடப்பட்டிருந்த பல வகை பூக்களின் மனம் மனதிற்கு இதம் தருவதாக இருந்தது.அந்த தோட்டத்தின் அழகை ரசிப்பதுபோல பூக்களை பார்த்த வண்ணம் நின்றிருந்தார் ஆதியின் தந்தை.
YOU ARE READING
😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)
Non-Fiction#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.