பகுதி - 31

629 37 17
                                    

" விக்ரம்....நான் எதுவும் சொல்லலை." என்றவளின் குரல் உள்ளே சென்றிருந்தது.

" ஹே....தப்பில்லை மது.அதுக்கு ஏன் நீ ஃபீல் பண்ற?"

" இல்லை விக்ரம் உங்க பேரு கூட யார்கிட்டயும் சொன்னதில்லை.அவ ஏன் இப்படி சொன்னானு எனக்கு புரியலை."

" மது கமான்...நம்ம இன்னும் டீன் ஏஜ் பசங்க இல்லை.வாய் வார்த்தையால சொன்னாதான் என் மனசு உனக்கு புரியுமா??"

" விக்ரம் ப்ளீஸ்..."

"மது எவ்வளவு நாள் உண்மைகிட்ட இருந்து உன்னால ஓடிப்போக முடியும்.என்னோட நடவடிக்கை செயல் எல்லாமே என்னோட உணர்வ உனக்கு புரியவச்சிருக்கும் அப்படீங்கிறதுல எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.அதே மாதிரி உன்னுடைய செயலும் நடவடிக்கை உன்னை எனக்கு அழகா வெளிக்காட்டிடுச்சு."

"இல்லை விக்ரம் எனக்கு உங்கமேல இருக்கிறது ஒரு விதமான  க்ரஷ்னு சொல்லலாம் மத்தபடி ஒன்னுமில்லை."

" என்னால உன்னை புரிஞ்சுகிட்ட அளவு கூட உன்னால உன்னை புரிஞ்சுக்க முடியலையா? பரவாயில்லை உனக்கு உன்னை புரியுறவரை நான் காத்திருக்கேன்."

" நீங்க காத்திருக்க தேவையில்லை விக்ரம் நான் என் பதில இப்பவே சொல்லிடறேன்." என்றவளை தடுத்த விக்ரம்," மது என்னோட உணர்வ நான் உன்கிட்ட பகிர்ந்து கிட்டேனே தவிர உன்னோட பதிலயோ உன்னோட உணர்வையோ நான் தெரிஞ்சுக்க விரும்பலை.எனக்கு உன் மனசு கொஞ்ச நாள்லயே தெரிஞ்சுடுச்சு ஆனால் உன்னால உன்னோட மனச புரிஞ்சுக்க முடியலை.உனக்கு உன்னை புரியுர வரை நான் காத்திருக்கேன்."

" வேணாம் விக்ரம் எவ்வளவு நாள் கடந்து போனாலும் என் பதில் மாறாது.நீங்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை."

அவளை அதற்கு மேல் பேசவிடாமல் தன் ஆள்காட்டி விரலை அவளின் உதட்டின் மேல் வைத்தவன்," எனக்கு உன் பதில் தேவையில்லை மது. என் மனசுல உள்ள உணர்வ உனக்கு தெரியப்படுத்தினேனே தவிர உன் மனச நான் கேட்கலை.என் வாழ்க்கையில ஒரே ஒரு பொண்ணுக்கு தான் இடம் இருக்கு அது நீதான்.எத்தனை வருஷம் ஆனாலும் உனக்காக நான் காத்திருப்பேன்.ஒரு வேளை உனக்கு உன் மனச கடைசி வரை புரிஞ்சுக்க முடியலைனாலும் என் காத்திருப்பு முடியாது என் மனசு மாறாது."

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now