பகுதி 29

Start from the beginning
                                    

"இங்க வாங்க....."மது கூப்பிட தயங்கி தயங்கி மதுவிடம் வந்த நிலா.மதுவை வைத்த கண் வாங்காமல் பார்த்து ," சொல்லுங்க...அம்....ஆண்டி." .வாய்வரை வந்த அம்மா என்ற செல்லை கஷ்டப்பட்டு ஆண்டி என்று மாற்றி கூறி புன்னகைத்காள்.

" நீங்க ஏன் தனியா விளையாடறீங்க உங்களுக்கு க்ளாஸ் இல்லையா??"

" எனக்கு க்ளாஸ் முடிஞ்சிடுச்சு எங்க அப்பா வந்துட்டாங்க பைக் எடுக்க போயிருக்காங்க அவங்களுக்காக இங்க காத்திருக்கேன்."

" ஓ.....ஒகே ஒகே டா.ஆனால் இப்படி தனியாலாம் வர கூடாது சரியா??"

"ம்...ஓகே அம்.ஆண்டி."
பேசிக்கொண்டிருக்கையில் பைக் ஹார்ன் கேட்க ," அப்பா வந்துட்டாங்க நான் போயிட்டு வரேன் ," என்று கூறியவள் மதுமிதா சுதாரிக்கும் முன் அவள் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு ஓடி தன் தந்தையை விரைவில் அடைந்தவள்," அப்பா.....அப்பா...சீக்கிரம் சீக்கிரம் கிளம்புங்க கிளம்புங்க வேகம் வேகம்...."என்று கூறி துரிதப்படுத்தினாள்.

" என்னாச்சு நிலா " என்று வினவினாளும் பைகை விரைவாக ஓட்டி வெளியுறினான் ஆதித்யன்.

" நான் அம்மாவை பார்த்தேன்பா..." என்று நிலா கூற வண்டியை சடன் ப்ரேக் போட்டு ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினான்.

" என்ன??? அம்மாவையா ?மதுவையா??"

" ம்....ஆமாம்....அப்பா....ஆனால் அப்பா நிலா குட் கேர்ள் அம்மாவை நான் அம்மானே கூப்பிடலை...கஷ்டப்பட்டு ஆண்டினு கூப்டுடேன்."
நிலா கூறியதை கேட்ட ஆதியின் உள்ளம் வேதனை கொள்ள." நிலா சாரி மா சாரி நான் உன்னை தனியா விட்டுட்டு போயிருக்க கூடாது."

" ஏன்பா....அம்மாக்கு நிலா யாருனு தெரியாமலே போயிடுமா??"

" சே...சே....ஏன்டா பாப்பா அப்படி சொல்ற ? "

" எனக்கு அம்மா வேணும்பா.....ப்ளீஸ்பா நீங்க நம்ம அம்மாவை இங்க கூட்டிட்டு வந்திடுங்கபா ப்ளீஸ் பா."

பைகின் முன்னால் அமர்ந்திருந்த நிலா அழத்தொடங்க ஆதி அவளை தன்புறம் திருப்பி அமரவைத்து அணைத்துக்கொண்டான்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now