பகுதி 25

Começar do início
                                    

" ம்.....என் வாயில நல்லா வந்திரும் பாத்துக்க,"

" இப்ப ஏன்டா நீ கோபப்படுற அப்படி நான் என்ன தப்பு பண்ணுன்னு இப்படி பேசுற?"

" ம்...அவங்க பழச மறந்துட்டாங்கனு தெரிஞ்சதும் எதுக்கு அவங்க கழுத்தில தாலியை தொங்கவிட்டு வந்த?"

" அது...ஏதோ அவசரத்தில அப்படி பண்ணிட்டேன்."

" ஓ..இதை நான் நம்பனும்?"

" ம்...மதுக்கு.பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு ஆனால் நாலு வருஷமா நடந்தது ஞாபகம் இருக்குமா இருக்காதானு எனக்கு உறுதியா சொல்ல முடியலை.ஒரு.வேளை அவளுக்கு ஞாபகம் இல்லைனா என்ன பண்றது அதான் அவ கழுத்தில தாலி இருந்தா யாரோ நமக்காக காத்திருக்காங்கனு அவ புரிஞ்சுக்குவா இல்லையா அதான் அப்படி பண்ணேன்.மத்தபடி அவளை காயப்படுத்தனும்னோ கஷ்டப்படுத்தனேம் னோ  சத்தியமா எனக்கு எந்த எண்ணமும் இல்லை."

" நீ அதை மட்டுமா செஞ்ச ? ஹாஸ்பிடல்ல மதுமிதா ஆதித்யன் னு பேரு கொடுத்திருக்க ஆனால் வீட்டு அட்ரஸ் அவங்க அப்பாவோடதை கொடுத்திருக்க, இதுக்கு என்ன கதை வெச்சிருக்க?"

" ஏன் ஜீவா என் மனைவி அடி பட்டு இரத்த வெள்ளத்தில இருக்கும்போது கூடவா நான் ப்ளான் பண்ணியிருப்பேனு நீ நினைக்கிற?"

" கண்டிப்பா...."

" ம்.....நான் அவளோட பேரு மட்டும்தான் சொன்னேன். அவளோட ஐடி கேட்டாங்க அதை வாட்மேன் கிட்ட கொடுத்துவிட்டேன் அதில இருக்கிற அவங்க அப்பா வீட்டு அட்ரஸை அவங்க ஃபார்ம்ல ஃபில் அப் பண்ணி கிட்டாங்க,இதுலயும் என் தப்பு எதுவும் இல்லை ஆனால் நான் சொல்றதை நீ நம்ப மாட்டனு எனக்கு புரியுது, இந்த விசாரனையெல்லாம் இந்த காலை நேரத்தில கண்டிப்பா பண்ணுமா நான் வேணா உங்க ஸ்டேஷனுக்கு வரவா அங்க நீங்க என்னை தாராளமா எப்படி வேணாலும் விசாரிக்களாம்."கூறியவனின் குரலில் வேதனை இருந்தது.இரவு முழுவதும் தூங்காத களைப்பு கண்களில் பிரதிபலித்தது.

" ஆதி நீ ஏன் இப்படியெல்லாம் பேசுற? உன் மேல இருக்கிற அக்கறையில தானே உன்னை யாரும் தப்பு சொல்லிற கூடாதுனு தானே என்னை நான் தெளிவு படுத்த உன்னை கேள்வி கேட்டேன்."

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Onde histórias criam vida. Descubra agora