மருத்துவமனை

Start from the beginning
                                    

"இல்லை டாக்டர் உங்க ரூம்ல இருந்து நேரா ஹெட்நர்ஸ பார்க்க போய்டு இப்பதான் வரேன்,என்னாச்சு??"என்றுவினவியபடியே மதுவை நோக்கியவர்," இவங்க கழுத்தில எப்படி தாலி வந்துச்சு ? நான் இதை அவங்க ஹஸ்பன்ட் கிட்டதானனே கொடுத்தேன்," என்ற கேள்வியுடன் அங்கு நின்றிருந்த அனைவரையும் பார்தார்.

" அதை தான் நானும் கேட்கிறேன், உள்ள வந்து ஒருத்தன் தாலி கட்டிட்டு போயிருக்கான் ஆனால் உங்க யாருக்கும் எதுவும் தெரியலை," என்று கோபத்தில் கத்தியவர் மதுவின் தந்தையிடம்," சாரி மிஸ்டர் ......?"

"மிஸ்டர் சௌந்தரன்,"

"ம்..எஸ் சாரி நான் மறந்துட்டேன், சாரி மிஸ்டர் சௌந்தரன், எங்க பக்கம் கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டோம், நான் என்ன னு விசாரிக்கறேன்," என்று கூறியவரை இடைமறித்த மதுவின் தந்தையோ," தப்பு உங்க மேல இல்லை டாக்டர் நீங்க சாரிலாம் கேட்க வேண்டாம், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் எங்க பொண்ணும் அவளை சரியா கவனிக்காத நாங்களும் தான்,"என்று கூறினார்.

" ம்...நான் என்னனு விசாரிக்கிறேன் சார் எதுக்கும் நீங்க யாராவது இவங்க பக்கத்திலயே இருங்க ," என்று கூறிவிட்டு செவிலியரிடம்," நீ..காளியை கூட்டிட்டு வந்து என்னை பாரு,"என்று அவருக்கு மட்டும் புரியும்படி கர்ஜித்துவிட்டு சென்றார்.

மருத்துவர் வெளியேற காத்திருந்தது போல மது மெதுவாக கண்களை திறந்து தன் தாயை நோக்கினாள்," ஹேய்...மாம்... எனக்கு ரொம்ப ஹெட்ஏக்கா (headache)இருக்கு ??வாட்ஸ் ஹாப்பனிங்(happening)??"என்று தன் தாயை பார்த்தபடி வினவ அவரோ மது அறியாவண்ணம் தன் கண்ணீரை புடவையால் வேகமாக துடைத்துவிட்டு," ஒன்னுமில்லை மா தலையில அடி பட்டதால அப்படி இருக்கும் உனக்கு நல்லா ரெஸ்ட் வேணும்னு டாக்டர் உனக்கு கொடுத்த மாத்திரைல நல்லா தூக்கம் வரும் அதனால உனக்கு அப்படி தோணுது நீ கண்ண மூடி படுத்துக்கோ," என்று விட்டு அவளின் தலையை கோதிவிட்டார்.

மதுவும் மறுப்பு எதுவும் கூறாமல் தன் கண்களை மூடி மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now