யதார்த்தம்

Start from the beginning
                                    

இதுவரை அவனின் அறைக்குள் அவள் நுழைந்தது இல்லை அதற்கு தைரியமும் வரவில்லை மனதில் ஆயிரம் தடுமாற்றங்கள் நிகழ அவனது அறை வாசலை அடைந்தாள் , கதவு சாத்தப்பட்டிருக்க மெதுவாக தட்டினாள், உள்ளிருந்து எந்த வித சலனமும் இல்லாது போக மேலும் சத்தமாக தட்டினாள் , இப்பொழுது அவனது குரல் யாரு என்று.மெதுவாக வினவ , தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ," நான்தான் மது சாப்பிட வாங்க ," என்று கூறி முடிக்கையில் பெரும் சத்தத்துடன் கதவு திறக்கப்பட ருத்ராமூர்த்ரியாக அங்கே நின்றிருந்த ஆதிய்யனை பார்த்தவளின் கை, கால்கள் நடுங்க மிரட்சியுடன் அவனை பார்தாள்.

அவளது இந்த நடுக்கத்தையும் மிரட்சியையும் அலட்சியம் செய்தவன்," என் ரூம்வரை வருவதற்கு உனக்கு தைரியம் வந்திடுச்சா?? எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இந்த அக்கரை காட்டிர மாதிரி நடிச்சு என் பக்கத்தில வரனும் னு கனவுல கூட நினைக்காத னு , இது தான் கடைசி தடவையா இருக்கனும் புரியுதா??? " என்று உறுமியவன் தன் அறைக்குள் செல்ல திரும்பினான் , பின் நினைவு வந்தவனாய் மீண்டும் மதுவை பார்தவன் ," ஓ... உன் கழுத்துல இருக்கிற இந்த தங்க சங்கிலியோட உரிமைய நிலை நாட்ட வந்தியா ?? " என்று நக்கலுடன் கேட்டவன் அவளை அருவருப்புடன் நோக்கி," இதை பாரு இந்த தங்க சங்கிலி ஊருக்கு தாலி ஆனால் உனக்கு நான் போட்டுருக்கிற கடிவாளம் , அதை நல்லா மனசுல வச்சுக்கோ , அதை விட்டுட்டு அதை சாக்கா வச்சு  என் பக்கத்தில நெருங்கனும் நினைச்ச , அதுக்கப்பறம் விளைவுகள் இன்னும் மோசமா இருக்கும் , புரியுதா??" என்று உறுமியவன் அவளது முகத்தையே நோக்கினான்.

அவனது விழி வீச்சை தாங்காமல் கீழே குனிந்தவளை ," கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும் னு அடிப்படை அறிவு கூட உனக்கு இல்லையா??" என்று வினவினான்.

அவனின் சரமாரி தாங்குதலில் நிலைகுழைந்து இருந்தவள் ,  புரிந்தது என்பதை உணர்த்த மெதுவாக தலையை ஆட்டினாள். அதற்கும் அவளை சீறும் விழிகளில்.நோக்கியவன்," கேள்வி கேட்டா வாயை திறந்து பதில் சொல்ல மாட்டீங்களா மகாராணி........,"என்று கூறி நிறுத்தியவன் ," ஆமா உன் பேரு என்ன??" என்று கேட்டான்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now