K💞M
OS💞
ஏங்க நான் ஒண்ணு கேட்கட்டுமா....!!!
ப்ச்..
ஏ...ங்க...
உங்களத்தான்..
-------------
-------------
அதுக்குள்ள தூங்கிட்டிங்களா...!!??இல்ல... சொல்லு.. என்றான் (கண்களை திறக்காமல்...)
ஒண்ணும் இல்லேங்க...
சரி தூக்கம் வந்தா தூங்குங்க..இல்ல..இல்ல..
லேசா தல வலிக்கிற மாதிரி இருக்கு...என்றான்அதான் மதியமே.. கொஞ்ச நேரம் தூங்க சொன்னேன்... கேட்டாதானே.
ப்ச்...(என்று உச் கொட்டினாள்.)ஹேய் விடு... அதுவா சரியாகிடும்...
Tablet வேற கொண்டு வரலியே என்று (முனகி கொண்டே.. )
ஏங்..க..!!
தைலம் இருக்கு...தேய்ச்சி விடவா..!?இல்...ல வேண்டாம்
பரவாயில்ல...அதா..னே தல வலிச்சாலும் பரவாயில்ல.. நான் தொடக் கூடாது அப்டி தானே..!!
ஹேய்..!
அப்டி நான் சொன்னனா..??பின்ன தைலம் தேய்ச்சா கொஞ்சம் தல வலிக்கு கேக்கும் ல.. வேணும்னா நீங்களே தேய்ச்சி கோங்க...
அதெல்லாம் சரியா கேக்காது என்றான் (நெற்றியை விரலால் அழுத்திய படி..)
அப்புறம்..??
ஒரு டீ குடிச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்...
சரி வாங்க போலாம் என்று வேகமாக எழுந்தாள்... முந்தியை இடுப்பில் சொருகி கொண்டே...
ஹேய்..!
ஹேய்..!
இருட்டுல நீ எங்க எந்திரிக்கிற... நீ இங்கேயே இரு.. நான் போய்ட்டு கடை இருக்கானு பாத்துட்டு வந்துடறேன்...