![]()
¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
💖 K💞M 💖ஆ...!!
அம்...மா...!!
என்ற அலறல் சத்தம் கேட்டு...சாலையில் சென்றவர்களில் சிலர்..அவசரம் அவசரமாக வண்டியிலிருந்த விழுந்த கதிர் முல்லை💞க்கு உதவி செய்ய ஓடிவந்தனர்...
அதற்குள் அங்கு சிறு கூட்டம் கூடி விட்டது...
பாத்து.. ப்பா..
மெதுவா... எந்திரிங்க...
அடி ஏதாச்சும் பட்டுச்சா..??
என்றார் ஒருவர்...எப்டி வண்டிய ஓட்டிட்டு போறான் பாரு.....என்றார் ஒரு அம்மா...
அவன் போனத பார்த்தா வேணும்ன்னு வந்து இடிச்சு தள்ளி விட்ட மாதிரி தான் இருந்துச்சு...
என்றார் ஒரு பெரியவர்..இப்டி உக்கார வைங்கப்பா அவங்க 2 பேரையும்......என்றார் மற்றொருவர்.
தள்ளி போங்க கொஞ்சம் காத்து வரட்டும் என்றாள் ஒரு மூதாட்டி..
இந்தா.. ம்மா.. தண்ணி குடி...என்றாள் ஒரு பெண்..
முல்லை 💞குடிக்க முடியாமல் சிரமப்பட்டாள்..
இருவருக்கும் நெற்றி,மணிகட்டு, முழங்கை ஆகிய இடங்களில் சற்று காயம் அதிகமாகவே இருந்தது...
இந்தா..ப்பா...
நீ..! குடி..என்றார் ஒருவர்..பரவாயில்ல ண்ண... வேண்டாம் கொஞ்சம் ஆட்டோ மட்டும்
கூப்பிடுங்க ண்ணா...இதோ.. தம்பி...
முல்லை💞யை பார்த்து வேற எங்காச்சும் அடிபட்டு இருக்கா..?? பாரு என்றான் கதிர்..
காயத்தினால் ஏற்பட்ட எரிச்சலில் கைகளை உதறிக்கொண்டு...வேற காயம் ஒண்ணும் இல்லேங்க..
இங்க..கையிலயும் நெத்திலயும் தான்...என்றவள்..
அய்யோ..!!உங்களுக்கு ரொம்ப ரத்தம் வருதுங்க..
![](https://img.wattpad.com/cover/299274275-288-k915376.jpg)